Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Sunday, 22 February 2015

நேரு பரம்பரையின் உண்மையான முகம்.

வணக்கம்.

நேரு குடும்பத்தைப் பற்றி எந்த அரசு வந்தாலும் மூடி வைக்கவே விரும்புகிறார்கள். நேருவின் தாத்தா முதல் இன்றைய தானை தலைவர் ராகுல் வரை இந்தியனாக காட்டிக்கொள்வதில் பெரிய ஈடுபாடு காட்டவில்லை. ஆனால் ஆட்சி, அதிகாரம் மட்டும் வேண்டும். நேரு பரம்பரையின் உண்மையான வரலாற்றை பற்றி பேச தயங்குவதற்கு காரணம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தவர்கள் என அவர்களை உயரத்தில் தூக்கி வைத்துவிட்டோம். எனில் அவர்களின் உண்மையான வரலாறு.? பல தளங்களில், இணையக் கோப்புகளில் படித்தவற்றை தொகுத்து கீழே கொடுத்துள்ளேன். 

நேரு குடும்ப வரைபடம்


நேரு குடும்பம் ஒரு இசுலாமியரிடம் இருந்து தொடங்குகிறது. கியாசுதீன் காஸி, 1850 -களில் இந்தியாவில் முகலாய ஆட்சி நடந்தபோது நகர கோட்வால்(நகர ஆணையர் என வைத்துக் கொள்ளலாம்)  பணிபுரிந்தவர். கியாசுதீன் பார்சி இனத்தை சேர்ந்தவர். கோட்வால் பணிக்கு அப்போதைய முகலாய அரசு வெளிநாட்டு குடிகளையே அமர்த்துவது வழக்கம். 1857-ல் நடந்த முதல் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரிடம் டில்லி வீழ்ந்தபின், இசுலாமியர் அனைவரையும் ஆங்கிலேய அரசு வேட்டையாட தொடங்கியது. இந்துக்களை கடுமையாக நடத்தியபோதும் கொலை செய்யும் அளவுக்கு போகவில்லை. இதனால் பல இசுலாமியர்கள் இந்துக்களாக மாறி வாழத் தொடங்கினர். குறைந்தபட்சம் பெயரை மாற்றிக் கொண்டனர். அப்படி மாற்றிக் கொண்டவர்களில் ஒருவர் தான் கியாசுதீன். கங்காதர் நேரு என தன் பெயரை மாற்றிக் கொண்டார். செங்க்கோட்டைக்கு அருகில் இருந்த "நேரு" கால்வாய் பக்கம் அவர் வாழ்ந்து வந்ததால், அதனையே தனது குடும்பப் பெயராகவும் வைத்துக் கொண்டார். மற்றபடி வேறு யாருக்கும் நேரு என்ற குடும்பப் பெயர் கிடையாது என்பது கவனித்துப் பார்த்தால் தெரியும். உதாரணம், இந்திரா காந்தி. நேரு தன் மகளுக்கு கூட தன் குடும்பப் பெயரை வைக்கவில்லை.(ஏனெனில் அது அவர்களின் குடும்பப் பெயர் இல்லை. உயிர் பிழைக்க ஒரு வழி மட்டுமே). இப்படி பெயரை மாற்றி தான் ஒரு காஷ்மீர் பண்டிட் என ஆங்கிலேயரை நம்பவைத்து தப்பித்துக் கொண்டார். 

நேரு பிறந்த இடத்தில் ஏன் அவருக்கு நினைவிடம் அமைக்கவில்லை?. பலருக்கு அவர் ஆனந்த் பவனில் பிறந்தார் என்ற வரலாறு தான் சொல்லப்படுறது. ஆனால், அவர் பிறந்தது அலாகாபத்தில் உள்ள மிர்கான்ச். இந்த இடம் ஒரு சிவப்பு விளக்கு பகுதி எனவே நேருவிற்கு அவர் பிறந்த இடத்தில் நினைவிடம் கிடையாது. அவரது தந்தை மோதிலால் அதை விற்றுவிட்டு தான், தங்களது பூர்விக இடமான ஆனந்த் பவனில் குடியேரினார். ஜவஹர்லால், தனது அரசியல் எதிரிகளை வளர விட்டதே இல்லை.மிகச் சிறந்த உதாரணம். சுபாஷ் சந்திர போஸ். காந்தி, சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரஸை கலைக்கச் சொன்னது நேருவையும் மனதில் கொண்டு தான். ஆனால் நாமே அவர் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடிக்கொண்டிருகிறோம். அவர் இந்தியனாக ஒருபோதும் தன்னை முன்னிருத்தியதில்லை. 1950-ல் ஐ.நா தனது பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை அமர்த வந்த வாய்ப்பை சீனாவுக்கு தாரை வார்த்தார். அமெரிக்கா சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க இந்தியாவை ஆறாவது நாடாக பாதுகாப்பு அவையில் சேர்க்க முயற்சிததையும் அவர் பொருட்பதுத்தவில்லை. ஆனால் இப்போது பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் குழுவில் இணைய அலைந்து கொண்டிருக்கிறோம்.

இந்திரா நேருவுடன்


இந்திரா காந்தி நாட்டு மக்களின் மனதில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுள்ளர். உண்மையில் அவர் இயற்பெயர் இந்திரா. காந்தி என்பதும் ஒரு வகையான ஏமாற்றுவேலை. பலருக்கி இதைப்பற்றி தெரிந்திருக்கும் இருந்தாலும் ஒருமுறை பார்த்துவிடலாம். இந்திரா ஆக்ஸ்பார்டு பல்கலைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்டு, திறன்கள் அடிப்ப்டையில் பாதியிலேயே பல்கலைக்கழகத்தால் வெளியேற்றப்பட்டார். பின்னர் இந்தியாவில் சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தபோது நேருவின் வீட்டிற்கு மதுபானம் கொண்டுவரும் நவாப் கானின் மகன் ஃபெரோஸ் கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. ஃபிரொஸ் கான் லண்டன் செல்லும்போது இந்திராவும் உடன் சென்றார். இசுலாம் மததிற்கு மாறி மைமுனா பேகம் என்று தனது பெயரையும் மாற்றிக்கொண்டு ஃபெரொஸ் கானைத் திருமணம் செய்துகொண்டார். தனது மகளின் மதமாற்றம் தன் அரசியல் வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் ஃபெரோஸ் கானை அழைத்து, தனது பெயரை ஃபெரோஸ் காந்தி என மாற்றிக் கொள்ள சொன்னார். 

இந்திரா ஃபெரோஸ் கான்
இப்படி பெயரை மாற்றிக் கொண்டதும், இந்திரா தனது கணவரின் கடைசி பெயரை சேர்த்ததும், நேரு குடும்பத்திற்கு காந்தி பெயர் வந்தது. இருவரும் இந்தியா வந்ததும் ஒப்புக்கு சப்பனியாக இந்திய வேத முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்யப்பட்டது. இந்திராவிற்கு ராஜிவ், சஞ்சய் என இரண்டு குழந்தைகள். 

இந்திரா ஃபெரோஸ் திருமணம்


முதலில் சஞ்சிய் ... இவரின் உண்மையான பெயர் சஞ்சிவ். இங்கிலாந்தில் ஒரு கார் திருட்டு வழக்கில் பிடிபட்ட இவரின் கடவுச்சீட்டு அந்நாட்டு காவல் துறையால் கைப்பற்ற்ப்பட்டது. இந்திராவின் தலையீட்டால், அப்போதைய இங்கிலாந்து தூதர் கிருஷ்ணன் மேனன், சஞ்சய் என்ற பெயரில் வேறு ஒரு கடவுச்சீட்டு தயார் செய்து இந்தியா அழைத்து வந்தார். ராஜிவ் பிறந்தபின் இந்திராவும் ஃபெரோஸ் கானும் பிரிந்து வாழ்ந்தனர். 

இந்திரா, ராஜிவ், சஞ்சிவ்
அவரது இரண்டாம் மகன் சஞ்சய், மற்றொரு இசுலாமியரான முகமது யுனிஸ் என்பவருக்கு பிறந்தவர் என கூறப்படுகிறது. சஞ்சய் ஒரு சீக்கிய பெண்ணை திருமணம் செய்து கொண்டதும், திருமணம் நடந்தது கூட யுனிஸின் வீட்டில். சஞ்சய் இந்திய அரசியலில் தனக்கென ஒரு நிழல் அரசாங்கத்தை அமைத்து நடத்திவந்தார். இந்திராவை தனது உண்மையான தந்தை ரகசியத்தை வத்து பலமுறை மிரட்டியதாகவும் பின்னர் மர்மமான முறையில் விமான விபத்தில் பலியானார். அவரின் மரணம் இந்திராவின் கவனத்திற்கு வந்தபோது அவர் கேட்ட கேள்வி "சஞ்சிய் கைகடிகாரம் கிடைத்ததா?" என்பதுதான். அதில் தான் நேரு குடும்பத்தின் பல ரகசியங்கள் அடங்கியதாக கூறப்படுகிறது.

சஞ்சய் இறுதிச் சடங்கில்

Sanjay with Menaka



ராஜிவ் காந்தி காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறியியல் துறையில் சேர்ந்து, குறைந்த மதிப்பெண்களுடன் பாதியிலேயே வெளியேரினார். பின்னர் இம்பீரியல் கல்லூரியிலும் இதே கதை தான். இப்படி ஒரு மேதையின் பெயரில் தான் நாட்டில் பல கல்வி நிறுவனங்கள். வாழ்க இந்தியா!!!. கே.என்.ராவ் தனது புத்தகத்தில் , சோனியாவை திருமணம் செய்ய அவர் கத்தோலிக்க மதத்திற்கு மாறியதாகவும் தனது பெயரை ராபர்டோ என மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் ரவுல், பியங்கா. 
அன்டானியோ மைனோ ராஜிவ்


ராஜிவ் தனது நடத்தைகளில் அதகளவு இசுலாமியராக நடந்து கொள்வார். செங்கோட்டையில் உரையாற்றும்போது, "300 வருடங்களுக்கு முன் நம் நாடு இருந்ததைப்போல நாம் மாற வேண்டும்." என்றார். பிரதமரானதும் லண்டனில் "தான் ஒரு பார்சி" எனக் குறிப்பிட்டார். இது எப்படியெனில், அவரின் தாத்தா நவாப் கானின் மனைவி பார்சி இனத்தை சேர்ந்தவர். நவாப் தனது மனைவியை இசுலாமியராக மாற்றி பின் திருமணம் செய்து கொண்டார். ராஜிவ் தனது பாட்டியும், தனது கொள்ளுத் தாத்தா(கங்காதர்/கியாசுதீன்) வகையாரக்களை மனதில் வைத்து தன்னை ஒரு பார்சியாக வெளிப்படுத்தவதில் தான் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் இதில் ஒரு மிகப்பெரிய வேடிக்கை அவரது இறுது சடங்குகள் இந்திய வேத முறைப்படி நடந்தன. மீண்டும் நாம் ஏமாற்றப்பட்டோம்!.

அன்டானியோ மைனோ

சோனியா காந்தியின் உண்மையான பெயர் அண்டொனியா மைனோ. காம்பிரிட்ஜ் பல்கலையில் படித்தவர் என கூறிக்கொண்டாலும், கல்லூரி கோப்புகளில் இவர் பெயர் கிடையாது. காம்பிரிட்ஜ் வாசலில் உள்ள ஒரு ஆங்கில திறன்பள்ளியில் சில காலம் ஆங்கிலம் கற்றுள்ளார். ஆனால் வெளியில் தான் காம்பிரிட்ஜ்-ல் படித்தேன் என திரித்து பரப்பியுள்ளார். இவரின் தந்தை நாசி படையினருக்கு உதவியத்ற்காக ரஷ்யாவில் சிறையில் இருந்த காலத்தில் தன் குடும்பத் தேவைகளுக்காக சிற்றுண்டி கடைகளில் பணிப்பென்ணாக வேலை பார்த்து வந்தார். அப்போது ராஜிவுடன் ஏற்பட்ட பழக்கத்தில் இருவரும் ஒருமனம் ஆனாகள். சோனியா மாதவ் ராவ் சிந்தியாவிடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருதார். இருவரும் ஒருமுறை அதிகாலை 2 மணியளவில் ஐ.ஐ.டி வளாகத்தில் தனிமையில் பிடிபட்டனர். பலமுறை டில்லி மற்றும் சென்னை விமான நிலையங்களில் இந்திய கோவில் சிலைகள் சுங்க சோதனைகளின்றி ரோம் நகருக்கு அனுப்பபட்டதும் அவைகள் அங்கு இவரின் தங்கை மைனோ வின்சி என்பவரின் கடையில் விற்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்ப்ட்டுள்ளன. மாதவ் ராவ், ராஜேஷ் பைலட் இருவரும் ராஜிவிற்கு பிரதமர் வேட்பாளர் போட்டியாக கட்சியில் செல்வாக்கோடு இருந்தவர்கள். ஆனால் இருவரும் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்கள். சோனியாவின் உறவினர்கள் ராஜிவை கொல்ல விடுதைப்புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திதாக ஒரு கருத்தும் கூறப்படுகிறது. 

சோனியா 1992-ல் தனது கடவுச்சீட்டை இத்தாலிய குடியுறிமைப்படி புதுப்பித்துக் கொண்டார். இத்தாலியருக்கு பிறந்ததால் ராகுல், ப்ரியங்கா இருவரும் இத்தாலிய குடிமக்கள் ஆனார்கள். இப்பதிவில் முன்பே கூறியதைப் போ இவர்களின் உண்மையான பெயர்கள் ரவுல் மற்றும் பியங்கா(இத்தாலிய பெயர்கள்). இந்தியா வந்தவுடன் ஒரே மாதிரியாக ஒலிக்கும் பெயராக ராகுல்,ப்ரியங்கா என வைத்துக்கொண்டனர். இருவரிடமும் இருப்பது இத்தாலிய கடவுச்சீட்டுகளே. பயணம் செய்ய அதைத்தான் அதிகம் பயன்படுத்துகிறாகள். ராகுல் 1992-ல் டில்லியில் உள்ள ஸ்டீபன் கல்லூரியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் விளையாட்டு கோட்டவில் தான் இடம் வாங்கினார். அதையும் முழுதாக முடிக்காமல் , ஃப்ளோரிட பல்கலைக்கழகத்தில் சேர்ந்து "B.A" படித்தார். அந்த "B.A" இங்கேயே படித்திருக்கலாமே. பின் 1995-ல் ட்ரினிடி கல்லூரியில் "M.Phil" பட்டம் பெற்றர், அதுவும் நேரிடையாக "B.A" பின் "M.Phil". நடுவில் "M.A" முடிக்க வேண்டும் என்று தலைவருக்கு யாரும் சொல்லவில்லை போலும். ஒரு முறை இவர் இத்தாலிய கடவுச்சீட்டில் வருவது செல்லாது என பாஸ்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பிறகு வழக்கம்போல் இங்கிருந்து தூதர் இந்திய கடவுச்சீட்டில் வெளியே அழைத்துவந்தார். 
Party_mood_rahul

26/11 அன்று நாடு பற்றிக் கொண்டு எரிந்த போது தலைவர் தன் சக்ககளுடன் 5-நட்சத்திர விடுதியில் இருந்தார். மாநில கட்சிக் கூட்டதிற்கு 1 கோடி வரை கட்சிக்காரர்கள் செலவு செய்ய வேண்டும். இவர்கள் மட்டும் வெளிநாட்டு வங்கிகளில் மூட்டைகட்டி வைப்பர்கள். என்ன கொடுமை இது. 

பல தளங்களில் படித்த விடயங்கள் இவை. ஒரு குறிப்பிட்ட தளம் தன் கட்டுரையை இப்படி முடித்திருந்தது. இந்த பதிவிற்கும் பொருத்தமாக பட்டது...

"ராஜிவ் வரை இந்தியாவில் முகலாயர்கள் ஆட்சி, சோனியவிற்கு பின் ரோம் ஆட்சி"

வெளிநாட்டு குடிமக்கள் நம் நாட்டில் எந்த அரசியல் கட்சியிலும் சேர முடியாது, தேர்தலில் போட்டியிட முடியாது என சட்டம் போட்டால் முதலில் வெளியேறும் குடும்பம் நேரு குடும்பமாகத்தான் இருக்கும்.