வணக்கம்!!!
பண்ணாட்டு நிறுவனங்க்கள் பல தகவல் மேலாண்மை மென்பொருட்களை பயன்படுத்தினாலும், சாதாரண பயனாளர்களின் தகவல் மேலாண்மைக்கு பெரும் உதவியாக இருப்பவை வலைப்பூக்கள்.இவற்றை பலதரப்பட்ட தகவல்களை சேமிக்க பயன்பதுத்தும் போதும் இதனை வடிவமைத்த நிறுவனங்கள் முறையான பாதுகாப்பு மற்றும் காப்புரிமை பற்றி பயனாளர்களுக்கு சுலபமாக தெரியும் அளவிற்கு தகவல்களை தெரிவிப்பதில்லை. உதாரணமாக, "Blogger" சேவையை எடுத்துக்க் கொண்டால் ஒவ்வொரு Blogger வலைப்பூவும் அதன் தனிப்பட்ட காப்புரிமையுடனே வருகிறது. ஆனால் தகவல் திருட்டு நடந்துகொண்டு தான் உள்ளது. எனவே பயனாளர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் வலைப்பூவில் "Copy/paste" செய்யும் விருப்பத்தேர்வை கூட முடக்கிவிடுகிறார்கள்.
சரி, நேரிடையாக விடயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட வலைப்பூக்களில் உள்ள தகவல்களை எப்படி "Copy/Paste" செய்வது. மக்களே இதுவும் ஒரு திருட்டு தான், அறிவுத் திருட்டு.
