Sunday, 17 November 2013

திடீரென்று சூரியன் மறைந்து விட்டால் என்னவெல்லம் நடக்கும்?

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை-நு சொல்லுவாங்க.ஆனால் சூரியன் திடீர்னு மறைஞ்சு போச்சுன்னா?சூரியன சுட்டது யாரு?(பன்னிகுட்டி ராமசாமி ஞாபகம் வந்தா நான் பொருப்பில்லை). பல தடவை நீங்க யோசிச்சிருப்பீங்க, கூகிள் ல தேடி நிறைய படிச்சிருக்கலாம்.அப்பிடி எதுவும் யோசிக்காதவங்க, படிக்கதவங்க இங்க படிச்சு தெளிவாயிடுங்க.இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு _________ வேணும். ஆஆஅ பாத்து எல்லாரும் கடுப்புல இருப்பீங்க. அதனால தான் கோடு போட்டுருகேன். நீங்களே அந்த அருமையான பேரை நிரப்பிக்கோங்க.
சரி இனிமே செந்தமிழ்-கு மாறிடலாம்.


Monday, 21 October 2013

வேற்று கிரகவாசிகளிடமிருந்து ஒரு அழைப்பு. WOW! சமிக்ஞை...

ஆண்டுக்கணக்கில் தேடிக்கொண்டிருக்கும் வேற்று கிரகவாசிகளிடமிருந்து ஒரு தொடர்பு கிடைத்தால்?. உள்ளூரில் நாம் எதிர்பார்க்கும் நபர், குறிப்பாக ஒரு பிரபலம் நம்மைத் தொடர்பு கொண்டாலே உடனே எதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி, ஆரவாரம், உற்சாகம் நம்மைத் தொற்றிக்கொள்ளும். இதுதான் அமெரிக்காவின் ஒஹியோ-வில் 1977-ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 அன்று நடந்தது.ஜெர்ரி எல்மன், ஒரு அமெரிக்க வான்வெளி ஆய்வாளர். 

  
Jerry Ehman


ஒஹியோ பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருந்தவர், "SETI" என்ற வேற்று கிரக உயிரின தேடுதல் ஆய்வுகளில் தன்முனைப்பளாரக ஈடுபட்டிருந்தவர். ஒருநாள் ஜெர்ரி தன் சாப்பாட்டு மேசையில் வருக்கப்பட்ட ரொட்டிகளை சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரம் அவரது கணிணியுடன் இணைக்கப்பட்டிருந்த அச்சு எந்திரத்தில்  இருந்து ஆறு எண்களும்,எழுத்துக்களும் கொண்ட ஒரு அச்சுப்படி(print out) வருவதைக் கண்டார். அதை எடுத்துப் படித்துப்பார்த்த அவர் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போனார். பின் அந்த அச்சுப்படி தாளில் "Wow!" என எழுதினார்.
 
Wow! சமிக்ஞை

ஜெர்ரி ஆய்வகத்தில் வேற்று கிரக உயிரின தேடுதல் ஆய்வுகளில் ரேடியோ அலைகளில் வரும் தகவல்களை "SETI" ஆய்வகத்திற்கு அனுப்பும் பிரிவில் பணியில் இருந்தார்.விண்வெளியின் தொலைவிலிருந்து வரும் தகவல்களையும்,சமிக்ஞைகளையும் படித்துப்பார்த்து ஏதேனும் வேற்று கிரகவாசிகள் தொடர்பு கொண்டார்களா என அனைவரும் சிண்டப் பிய்த்துக்கொண்டிருந்த நேரம். ஒவ்வொரு வாரமும் "The Big Ear" ஒஹியோவின் தொலைநோக்கி மையத்திலிருந்து ஒருவர் அங்கு திரட்டிய தகவல்களை ஜெர்ரியிடம் தருவார். அதைப் படித்து ஏதேனும் முக்கியமான தகவல்களோ, தொடர்போ இருந்தால் அதனை ஜெர்ரி "SETI" மையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்த நிகழ்விற்கு பதினெட்டு வருடங்களுக்கு முன் Philip Morrison and Giuseppe Cocconi என  இரண்டு இயற்பியலாளர்கள் வேற்று கிரகத்தில் இருந்து யாரேனும் நம்மைத் தொடர்பு கொண்டால் அது எப்படிப்பட்ட சமிக்ஞையாக இருக்கும் என சிறிய கருத்து ஒன்றை கூறினார்கள். "ரேடியோ அலைகள் உருவாக்குவதற்கு மிக சுலபமானவை மற்றும் மிக நீண்ட தொலைவு போகக்கூடியவை. ஒரு ஹைட்ரோஜென் அணுவை எறியவிடுவதன் மூலம் கூட இதை உருவாக்கலம் எனவே வேற்று கிரக வாசிகள் நம்மை தொடர்பு கொள்ள நிச்சயம் ரேடியோ அலைகளையே பயன்படுத்துவார்கள் மேலும் இந்த முறையில் கிடைக்கும் அலைகளின் அதிவெண்(Frequency) 1420MHZ என்ற அளவில் இருக்கும், எனவே விண்வெளியில் சற்று சத்தமாக எதேனும் கிடைக்கிறதா என்று தேடுங்கள் என கூறியிருந்தனர்".
 
Wow! சமிக்ஞையின் அமைப்பு


ஆகஸ்டு 15 1977-ல் இந்த மாதிரியான ஒரு ரேடியோ அலை தான் புவியை வந்தடைந்தது. ஜெர்ரி பார்த்த அந்த ரேடியோ சமிக்ஞை 1420MHZ -க்கு மிக அருகில் இருந்தது அதாவது 1420.4556MHZ.இந்த சமிக்ஞை 72 நொடிகளுக்கு நீடித்தது.சமிக்ஞையின் அமைப்பும் கூட Morrison மற்றும் Cocconi கூறிய வகையில் இருந்தது ஆச்சர்யம். அந்த அச்சுப்படியில் உள்ள அலைவரிசை 6EQUJ5 என்ற வரிசயில் பதிவானது. ரேடியோ அலைவரிசையின் செறிவு(intensity) எண்களாலும், எழுத்துக்களாலும் அளக்கப்படுகின்றன. 0 என்றால் மிக குறைந்த அளவு, 9 -க்கு பிறகு  10-க்கு பதிலாக  A, 11-க்கு B , பின்னர் Z வரை இப்படியே இது தொடரும். எனவே ஆங்கில எழுத்தின் கடைசியை நெருங்கும்போது அலைவரிசையின் செறிவும் அதிகமாக இருக்கும். 

சமிக்ஞையில் U
ஜெர்ரி கண்ட சமிக்ஞையில் U என்ற எழுத்து இருப்பதைப் பார்த்து மனிதர் அசந்துவிட்டர் ஏனென்றால் இது ஆங்கில கடைசி எழுத்தின் வெறும் நாங்கு எழுத்துக்களே குறைவாக இருந்தது. சமிக்ஞையை ஆரய்ந்து முடித்தபின் "இதுவரையில் நான் இப்படிப்பட்ட ஒரு சமிக்ஞையை பார்த்ததில்லை என்று தெரிவித்தார்." பின்னர் தான் அதன் அருகில் "Wow!" என்று எழுதினார். "சாதாரண சமிக்ஞையைப்போல் 30 மடங்கு சக்தி வாய்ந்தது U என்ற செறிவளவு, கிட்டத்தட்ட அது ஒரு அழைப்பு போல்; அதானால் தான் அதன் அருகில் "Wow!" என்று  எழுதிவிட்டேன் "என்றார் ஜெர்ரி .
ஜெர்ரியைப் போலவே செ.டியும்(SETI) ஆச்சர்யம் அடந்தது. அந்த சமிக்ஞை எங்கிருந்து யாரால் அனுப்பப்பட்டது.அது ஒரு குறுகிய "AM/FM" சமிக்ஞை போலவே இருந்தது, இறுதியில் நமக்கு அருகில் இருக்கும் "சாகிடேரியஸ்" நட்சத்திரக்கூட்டத்தில் இருந்து இந்த சமிக்ஞை வந்தது தெரிந்து விஞ்ஞானிகள் அந்த பகுதி முழுவதையும் சல்லடை போட்டுத் தேடினார்கள். ஆனால் ஒன்றும் அகப்படவில்லை. 

"சாகிடேரியஸ்" நட்சத்திரக்கூட்டம்
அதே அலைவரிசை கொண்ட சமிக்ஞை திருப்பி அனுப்பியும் அதற்கும் பதில் கிடைக்கப்பெறவில்லை. ஒருவேளை அந்த சமிக்ஞை அனுப்பியவர்கள் அந்த இடத்தில் இருந்து அகன்று விட்டிருக்கலாம் என்று யூகித்தனர். மேலும் மற்ற பல கோணங்களிலும் இது ஆராயப்பட்டது, இந்த சமிக்ஞை ஏதேனும் செயற்கைகோள், ராணுவ செய்தி அனுப்பும் எந்திரங்கள்,வின்வெளி குப்பையானா சில வின்கலங்கள், தவறுதலாக அனுப்பப்பட்ட பொது சமிக்ஞைகளாக இருக்கும எனவும் ஆராயப்பட்டன. ஆனால் இதற்கு எல்லாம் கிடைத்த பதில் இல்லை என்பதே. "தகவல் அனுப்புபவர்கள் கண்டிப்பக ஒரு முறைக்கு மேல் தகவலை அனுப்புவார்கள் ஆனால் இது ஒரு முறை மட்டுமே அனுப்பப்பட்டது , ஆகஸ்டு 15-க்கு பிறகு இப்படி எதுவும் நம்மை அடையவில்லை, ஒரு அழைப்பை நாம் நிச்சயம் செய்வதற்கும் அதுவே சிறந்த வழி" என்றார் ஜெர்ரி. நிச்சயமாக இது எதோ விண்வெளி பயணிகள் அல்லது வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய தகவல் தான், ஆனால் அனுப்பியவர்களை நாம் தவறவிட்டுவிட்டோம் எனவும் ஆய்வுகள்  செய்யப்பட்டன. எப்படியிருந்தாலும் அயல் கிரகவாசிகள் நம்மை தொடர்புகொள்ளும் நோக்கில் நம்மை வந்தடந்த ஒரே சமிக்ஞை  WOW! மட்டுமே.

Saturday, 28 September 2013

இந்தியக் குழந்தைகளுக்கு பில் கேட்ஸ் செய்தது என்ன?

பில் கேட்ஸ். இந்த பெயரை கேள்விப்படாதவர்கள் கண்டிப்பாக உலகில் உண்டு. நம் சமூகம் வெளிநாட்டவர் என்றால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது வாடிக்கை என்றாலும் இவரை முன்மாதிரியாக கொண்ட பல இளைஞர்களை உருவாக்கிய பெருமை நம் நாட்டிற்கே!. பில் கேட்ஸை உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த இடுகையை இதற்கு மேல் தொடரதீர்கள். :-(


Saturday, 31 August 2013

பதிவர் சந்திப்பு : பிரபல பதிவர்கள்-- புதிய பதிவர்கள் என்ன நடக்கிறது??

இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு நாளை நடைபெற உள்ளது. பிரபல பதிவர்கள் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு அதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் புதிய பதிவர்கள் அதைப்பற்றி எனக்கென்ன கவலை என்பதைப்போல் வெங்காயம்,வெள்ளைப்பூண்டு(இரண்டும் இந்திய பொருளாதாரத்துடன் மிக நெருக்கம்) என்று பதிவுகளை போட்டு வறுத்தெடுத்துக்கொண்டிருக்கிறோம். கொஞ்சம் தமிழ்மணம் பக்கம் சென்று பார்த்தால் காம்ரேட் ஆரூர் மூனா செந்தில் ,கனவுகள் ராஜி, தென்றல்” சசிகலா,தமிழ்வாசி” பிரகாஷ், டிடி,வீடு திரும்பல்” மோகன்குமார்,கவிதை வீதி”சௌந்தர்,மதுமதி,கோவை நேரம்”ஜீவா,சுரேஷ்,சங்கவி,(விட்டுப்போனவர்கள் மன்னிக்கவும்... முடியல!) போன்ற பதிவர்கள் பதிவர்கள் சந்திப்பு பற்றி பல விலாவாரியான பதிவுகளை எழுதி தள்ளிவிட்டனர். ஆனால் புதியவர்களிடம் சொற்பமான பதிவுகளே பதிவர் சந்திப்பு பற்றி வந்திருக்கின்றன. இதற்கு அடிப்படையான காரியம் "நாம் புதியவர்கள்" என்ற எண்ணம் தான் என்று நினைக்கிறேன்.  எனவே அதை தூக்கி குப்பை வண்டியில் எறிந்துவிட்டு நாமும் களத்தில் இறங்குவோம்.எதற்காக சொல்கிறேன் என்றால் , ஒருவேளை பதிவுலக வாசகர்களின் கெட்ட நேரம் நாமும் பிரபல பதிவர் ஆகிவிட்டால், "நீ என்ன பிரபல பதிவர், பதிவர் சந்திப்பு பற்றி ஒரு வரியாவது எழுதுனியா? இல்லை என்னைத்தான் பதிவர் சந்திப்புக்கு வர சொன்னியா என்று யாரவாது கேள்வி கேட்டால் "சரிங்க சித்தப்பு இனிமே உங்கள எங்க கண்டாலும் கூப்புடுரேன் -னு" சமாளிக்க வேண்டியதில்லை.எப்படியும் சில வயித்தெரிச்சல் புடிச்சவங்க இந்த சந்திப்பு முடிஞ்சதும் "பதிவர் சந்திப்பு தேவையா? ... பன்னிகுட்டி தேவையா னு " பதிகளை போடத்தான் போறாங்க. அவங்களுக்கு பின்னூட்ட பதில் எழுதுவதற்கு சில விடயங்கள் தெரிஞ்சு வச்சுக்க வேண்டியது அவசியம்.

 சரி புதியவர்கள் என்ன பண்ணலாம். பதிவுகளை வாசிப்பவர்கள் அனைவரும் தமிழ்மணம் போன்ற திரட்டிகளை அறிந்து வைத்துக்கொள்வது இல்லை. என் நண்பர் வட்டத்தில் பலருக்கு பதிவுலகமே அறிமுகம் ஆகி இருக்கவில்லை என் வலைப்பூ இணப்பை கொடுக்கும் வரை. எனவே பிரபல பதிவர்களின் பதிவர் சந்திப்பு சம்பந்தப்பட்ட பதிவுகளை நம் வலைப்பூவில் இணைத்திடுவோம். இது இன்னும் இப்படி ஒரு எழுத்துலகம் இருக்கிறது, இங்கும் தரமான எழுத்தாளர்கள் உள்ளார்கள் என்பதை பலரும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இதில் இன்னுமொரு நல்ல விடயம் சந்திப்புல கறிசோறு வேறு. சந்திப்புக்கு போகும் அல்லக்கையிடம் இரண்டு பாதிரம் கொடுத்து "ஒன்னு உனக்கு, ஒன்னு எனக்கு" என்று இந்த ஒரு நாள் நாமெல்லாம் "அன்னவேரி கண்ணையன்" ஆகலாம்...
எனக்கு பிடித்த இன்னொரு விடயம் பதிவர் சந்திப்பில் புத்தகங்கள் வெளியிடுவது. உதாரணத்திற்கு சாரு , ஜெ.மொ.. இவர்கள் எழுத்தாளர்கள் என்பதால் என்ன சொன்னாலும் சாமானியன் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அழிச்சாட்டியம் பண்ணுபவர்களுக்கு மத்தியில், இப்படி புதிய எழுத்துலகம் உருவாவது இந்த் நாசமாபோன கோஷ்டி பூசலை தடுக்க உதவும்.

பதிவர் சந்திப்பு பற்றிய செய்திகள்.
http://www.rahimgazzali.com/2013/08/blogger-meeting-2013.html,

"பதிவர் திருவிழா" திறம்பட ஒருங்கிணைத்து நடத்தும் அனைத்து பதிவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Monday, 12 August 2013

The Conjuring - இது சாதாரண திகில் படம் இல்லை...!

திகில் படங்களில் இரண்டு வகை, ஒன்று படுபயங்கர காட்சிகள், வெட்டு குத்து என திரையை ரத்தக்களரி செய்துவிடுவது. மற்றொன்று ஒலி, காட்சியைப்புகள் இவற்றை வைத்தே அடிவயிற்றை கலக்கும் படங்கள். சமீபத்தில் வெளிவந்த "The Conjuring" இரண்டாவது வகை.

Conjuring Image
 டிஸ்கவரி தமிழில் இரவு 11 மணிக்கு "ஹாண்ட்டிங்" என்று ஒரு திகில் தொடரை அவ்வப்பொழுது ஒளிபரப்புவார்கள். பல தொடர்களைப் பார்த்த தைரியத்திலும், எல்லாம் ஒரே கதைதானே என்றும் தெனாவட்டாக போய் உட்கார்ந்தால், வெளியே வரும்போது பேயறந்தது போல் ஆகிவிட்டது. நன்றாக தெரிந்த கதை தான்!. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு பெரிய வீட்டை ஒரு அழகான குடும்பம் விலைக்கு வாங்குகிறது, அவர்கள் தங்களது அனைத்து சேமிப்பையும் அந்த வீட்டில் முதலீடு செய்திருப்பதால் அந்த வீட்டை விட்டு வேறு எங்கும் போக முடியாத நிலை. அந்த வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி அவர்களை அழிக்க நினைக்கிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டு வருவார்கள். இந்த கதையை பல படங்களில் - "Excorcist" வகையரக்களில் பார்த்திருந்தாலும் "The Conjuring" வித்தியாசப்படுகிறது. ஐந்து குழந்தைகளுடன் ஒரு குடும்பம் ஃப்ளொரிடாவின் ஒதுக்குபுறத்தில் குடியேறுகிறது. நூறு வருடங்களுக்கு முன் அந்த வீட்டில் வாழ்த்த ஒரு பெண்(சூனியக்காரி) தன் கைக்குழந்தையை சமையலரை கத்தியால் கொன்று விட்டு , அந்த வீட்டிற்கு யார் குடிவந்தாலும் அவர்களை கொன்றுவிடுவதாக சாபமிட்டுவிட்டு தன் நிலத்திலுள்ள மரத்தில் தீயசக்திக்காக தன்னை பலியிட தூக்கில் தொங்கிவிடுகிறள். சில நாட்களில் அந்த வீட்டில் இருக்கும் அவளின் ஆவி ஒவ்வொரு குழந்தையாக தொல்லை கொடுக்கிறது. ஒரு சிறுமியிடம் உங்கள் வீட்டிலிருக்கும் அனைவரையும் கொல்லப்போவதாக மிரட்டுகிறது. உடனே அவர்கள் தீயசக்திகளை விரட்டும் எட்வார்ட் தம்பதியின் துணையை நாடுகிறார்கள். அவர்கள் எப்படி அந்த தீயசக்தியை கண்டிபிடிக்கிறார்கள் , அந்த குடும்பத்தை காப்பாறுகிறார்கள் என்பதை (முடிந்தால்) திருட்டு விசிடி-யில் பார்க்காமல் திரையரங்கிற்கு சென்று பாருங்கள். நூற்றுக்கணக்கில் இப்படிப்பட்ட படங்கள் வந்த் போதிலும்,"Conjuring " -ல் அட்டகாசமான திரைக்கதையும் எடுக்கப்பட்ட விதமும் இது சாதாரண படங்களில் இருந்து தனித்து தெரிகிறது. உதாரணமாக எட்வார்ட் இப்படி பல வீடுகளில் ஆவிகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து சாபமிடப்பட்ட பொருட்களை தன் வீட்டு தரைத்தளத்தில் சேமித்து வைத்திருப்பார். அவரிடம் ஒரு பத்திரிக்கையாளர் "இப்படி சாபமிடப்பட்ட பொருட்களை உங்கள் வீட்டிலே வைத்திருக்கிறீர்களே" என்று கேட்பதற்கு அதற்கு அவர் சொல்லும்  விளக்கம் "நான் எல்லா துப்பாக்கிகளையும் ஒன்றாக வத்திருக்க விரும்புகிறேன், தனித்தனியே இருந்து அது பல உயிர்களை எடுக்காலாமல்லவா?". ஆவிகளை படம்பிடிக்க அனைத்து  அறைகளிலும் புகைப்படக்கருவிகளைப் பொருத்துவது, ஒலிகளை பதிவு செய்வது, இவற்றை ஆவனமாக்கி பாதிரியாரிடம் நிஜமாகவே அந்த வீட்டில் ஆவி உள்ளது, எனவே பேயோட்டும் நிகழ்ச்சிக்கு அனுமதி வேண்டும் என கேட்பது ; அனுமதி கேட்கும் போது  பாதிரியார் அந்த குடும்பம் சர்ச்-ல் உறுப்பினர் இல்லையென்றும், குழந்தைகள் ஞானஸ்நானம் செய்யாததால் இதற்கு நேரிடையாக வாடிகன் தான் அனுமதி அளிக்க வேண்டும் என கூறுகிறார்,இப்படி சின்னச் சின்ன விசயங்களையும் கதையில் புகுத்தியுள்ளனர்.. ஒரு உண்மைக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் திகில் படங்களின் வரிசையில் நிச்சயமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.