Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts
Showing posts with label பொழுதுபோக்கு. Show all posts

Sunday, 5 October 2014

நம்பமுடியாத படங்கள்- மோசமாக கட்டமைக்கப்பட்ட நமது சமூகத்தின் முடிவு

வணக்கம்.

யுடோபியா என்றொரு கற்பனை சமூகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

சர்.தாமஸ் மோர் என்ற எழுத்தாளர் 15-ம் நூற்றாண்டில் தனது கதையில் இந்த கற்பனை சமூகத்தைக் குறித்து எழுதினார். இந்த சமூகம் மிக உயரிய கொள்கைகளையும் மனித உரிமைகளையும் கொண்டது. "Ideal Soceity" என்று சொல்வார்கள், மிகச் சிறந்த சட்டங்களை கொண்ட இந்த சமூகத்தில் அமைதியும் வளமும் நிறந்து வழிந்தன.

இதன் சுற்றுச்சூழல், மேற்கேத்தைய வாழ்க்கைச் சூழலில் இருந்து பெரிதும் மாறுபட்டது, இயற்கையோடு ஒத்து வாழ்வது. யுடோபியாவின் பொருளாதார மாதிரியை பல கம்யுனிச, பொருளாதார அறிஞர்களும் வரவேற்றுள்ளனர். மிக முக்கியமாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்த சமூகம். பலதரப்பட்ட மதங்களைப் பின்பற்றும் மக்கள் ஒற்றுமையுடனும், நமது தற்போதைய அறிவியல் தொழில்நுட்ப கருத்துக்களை ஒத்த வளர்ச்சியையும் கொண்டுள்ளது. போர்களின்றி அமைதியுடன் வாழும் விழுமியங்களை கொண்டிருந்ததாக இச்சமூகம் வடிவமைக்கப்பட்டது. இப்படி பல சிறப்புகளை வாய்ந்தது யுடோபியா சமூகம். இதைப் பற்றி சொல்ல ஒரு தனி பதிவே தேவைப்படும்.

யுடோபியா சமூகம், அப்படியே அதற்கு நேர்மாறான மற்றொரு சமூகத்தையும் தோற்றுவித்தது. டிஸ்டோபியா. எங்கும் பொய், பொறாமை, குழப்பம், சுயநலம் போன்ற குணங்கள் நிறைந்திருந்த இதன் அழிவினை கீழேயுள்ள படங்களில் காணலாம்.





டிஸ்டோபியா சமூகம் என்று ஒன்று இருந்தால் அதன் அழிவு எப்படி இருக்கும் என இந்த படங்கள் காண்பிக்கின்றன. நமது தற்போதைய நிலைக்கும் இதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. கண்டிப்பாக இது ஒரு நாள் நடக்கத்தான் போகிறது நம் சமூகம் அதன் தற்போதைய கோட்பாடுகளை கைவிடாவிட்டால்.

இந்த படங்கள் எல்லாம் மினியேச்சர் என்னும் மாதிரிகள். அழிந்து போன நகரத்தை அப்படியே கொண்டுவந்துள்ளனர். கீழேயுள்ள படங்களைப் பாருங்கள், இவை எவ்வளவு சிறியவை என்று தெரியும்





என்ன நம்ப முடிகிறதா!!!



Friday, 25 July 2014

எம்.ஜி.ஆர் -ருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்.

வணக்கம்.

எம்.ஜி.ஆர் - ஏ.ஆர்.ரகுமான் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்கள். ஆனால் எம்.ஜி.ஆருக்கு ரகுமான் ஒரு பாடல் இல்லை கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் இசையமைத்துள்ளார்.

நான்கில் எனக்கு பிடித்த ஒரு மெலோடி பாடலை கீழே காணொளியாக கொடுத்துள்ளேன்.

Sunday, 6 July 2014

யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஷரபோவா அல்லது சச்சின் ?

வணக்கம்.

ஷரபோவா சச்சினை யாரென்று தெரியது என்று சொன்னது சச்சினுக்கு வேண்டுமானால் பெரிதாக இல்லாமல் இருக்கலம். ஆனால் அவரின் அடிபொடிகளாகிய சச்சின் ரசிகனுக்கு (வெறியர்களுக்கு என்றும் கூறலாம்) வேறு அனைத்தையும் விட முக்கியமான விடயம்.


S.Ramani அவர்களின் பதிவில் ஒரு பெயரிலாத கொரில்லா(அதான் பெயரே இல்லையே, என்ன பெயர் சொன்னால் என்ன) இந்த கேள்வியைத் தான் கேட்டது. ரமணி அவர்களின் பதிவின் இணைப்பு கீழே...
http://ramaniecuvellore.blogspot.in/2014/07/blog-post_5.html

Saturday, 7 June 2014

எந்த வேலைகளை செய்ய இந்தியர்கள் அதிகமாக கூகிள் பயன்படுத்துகிறார்கள்!!

வணக்கம்!

ஏதாவது வேலை செய்யும் போது , பாதியில் மாட்டிக் கொண்டால் இப்போது உடனே கேட்பது திருவாளர் கூகிளைத் தான். கீழே பல நாட்டவர்கள் எந்த வேலைகளை கூகிள் துணையுடன் செய்கிறார்கள் என்று படம் எடுத்து போட்டுள்ளேன்.

படத்தில் உள்ள சில சொற்கள் , சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கலாம்... "discretion is advised"


Monday, 3 February 2014

சூப்பர் சிங்கர் 4- திவாகர் எப்படி பட்டத்தை கைப்பற்றினார்?

பல பேர் பல பதிவுகளை எழுது தள்ளிவிட்டனர் இதைப் பற்றி.. நான் கொஞ்சம் தாமதம். இருந்தாலும் எதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

முதலில் சூப்பர் சிங்கரில் இந்த ஓட்டு மூலம் ஒரு நல்லது நடந்தது போல் இருக்கிறது. என்ன என்கிறீர்களா? திறமைக்கு மதிப்பு கிடைத்துள்ளது. பதிவான ஓட்டுகளில் எப்படி கிட்டத்தட்ட 80 சதவீதம் திவாகருக்கு போனது?