வணக்கம்.
யுடோபியா என்றொரு கற்பனை சமூகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சர்.தாமஸ் மோர் என்ற எழுத்தாளர் 15-ம் நூற்றாண்டில் தனது கதையில் இந்த கற்பனை சமூகத்தைக் குறித்து எழுதினார். இந்த சமூகம் மிக உயரிய கொள்கைகளையும் மனித உரிமைகளையும் கொண்டது. "Ideal Soceity" என்று சொல்வார்கள், மிகச் சிறந்த சட்டங்களை கொண்ட இந்த சமூகத்தில் அமைதியும் வளமும் நிறந்து வழிந்தன.
இதன் சுற்றுச்சூழல், மேற்கேத்தைய வாழ்க்கைச் சூழலில் இருந்து பெரிதும் மாறுபட்டது, இயற்கையோடு ஒத்து வாழ்வது. யுடோபியாவின் பொருளாதார மாதிரியை பல கம்யுனிச, பொருளாதார அறிஞர்களும் வரவேற்றுள்ளனர். மிக முக்கியமாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்த சமூகம். பலதரப்பட்ட மதங்களைப் பின்பற்றும் மக்கள் ஒற்றுமையுடனும், நமது தற்போதைய அறிவியல் தொழில்நுட்ப கருத்துக்களை ஒத்த வளர்ச்சியையும் கொண்டுள்ளது. போர்களின்றி அமைதியுடன் வாழும் விழுமியங்களை கொண்டிருந்ததாக இச்சமூகம் வடிவமைக்கப்பட்டது. இப்படி பல சிறப்புகளை வாய்ந்தது யுடோபியா சமூகம். இதைப் பற்றி சொல்ல ஒரு தனி பதிவே தேவைப்படும்.
யுடோபியா சமூகம், அப்படியே அதற்கு நேர்மாறான மற்றொரு சமூகத்தையும் தோற்றுவித்தது. டிஸ்டோபியா. எங்கும் பொய், பொறாமை, குழப்பம், சுயநலம் போன்ற குணங்கள் நிறைந்திருந்த இதன் அழிவினை கீழேயுள்ள படங்களில் காணலாம்.
டிஸ்டோபியா சமூகம் என்று ஒன்று இருந்தால் அதன் அழிவு எப்படி இருக்கும் என இந்த படங்கள் காண்பிக்கின்றன. நமது தற்போதைய நிலைக்கும் இதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. கண்டிப்பாக இது ஒரு நாள் நடக்கத்தான் போகிறது நம் சமூகம் அதன் தற்போதைய கோட்பாடுகளை கைவிடாவிட்டால்.
இந்த படங்கள் எல்லாம் மினியேச்சர் என்னும் மாதிரிகள். அழிந்து போன நகரத்தை அப்படியே கொண்டுவந்துள்ளனர். கீழேயுள்ள படங்களைப் பாருங்கள், இவை எவ்வளவு சிறியவை என்று தெரியும்
என்ன நம்ப முடிகிறதா!!!
Sunday, 5 October 2014
நம்பமுடியாத படங்கள்- மோசமாக கட்டமைக்கப்பட்ட நமது சமூகத்தின் முடிவு
Labels:
அரசியல்
,
சமூகம்
,
பொழுதுபோக்கு
Friday, 1 August 2014
தமிழ்மணத்தின் டெம்ப்ளேட் பதிவர்கள்.
வணக்கம்.
வலைப்பூ திரட்டிகளில் பலராலும் பயன்படுத்தப்படும் தமிழ்மணம் சில மாதங்களாகவே ஒரு மாதிரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. தொடர்ந்து படிப்பவர்கள் இதை கவனித்திருக்கலாம். பதிவுகளை வகைப்படுத்தி தேடி படித்தாலும் இதே கதை தான். நன்கு அறியப்பட்ட பதிவர்களின் பதிவுகள் திரட்டிகள் இல்லாமலே பலராலும் படிக்கப்படும். ஆனால் புதிதாக எழுதுபவர்களுக்குத் தான் சிக்கல். பல மாதங்களாகவே "டெம்ப்ளேட்" பதிவர்களின் அலப்பறை இங்கே தாங்க முடியவில்லை.
வலைப்பூ திரட்டிகளில் பலராலும் பயன்படுத்தப்படும் தமிழ்மணம் சில மாதங்களாகவே ஒரு மாதிரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. தொடர்ந்து படிப்பவர்கள் இதை கவனித்திருக்கலாம். பதிவுகளை வகைப்படுத்தி தேடி படித்தாலும் இதே கதை தான். நன்கு அறியப்பட்ட பதிவர்களின் பதிவுகள் திரட்டிகள் இல்லாமலே பலராலும் படிக்கப்படும். ஆனால் புதிதாக எழுதுபவர்களுக்குத் தான் சிக்கல். பல மாதங்களாகவே "டெம்ப்ளேட்" பதிவர்களின் அலப்பறை இங்கே தாங்க முடியவில்லை.
Friday, 25 July 2014
எம்.ஜி.ஆர் -ருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்.
வணக்கம்.
எம்.ஜி.ஆர் - ஏ.ஆர்.ரகுமான் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்கள். ஆனால் எம்.ஜி.ஆருக்கு ரகுமான் ஒரு பாடல் இல்லை கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் இசையமைத்துள்ளார்.
நான்கில் எனக்கு பிடித்த ஒரு மெலோடி பாடலை கீழே காணொளியாக கொடுத்துள்ளேன்.
எம்.ஜி.ஆர் - ஏ.ஆர்.ரகுமான் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்கள். ஆனால் எம்.ஜி.ஆருக்கு ரகுமான் ஒரு பாடல் இல்லை கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் இசையமைத்துள்ளார்.
நான்கில் எனக்கு பிடித்த ஒரு மெலோடி பாடலை கீழே காணொளியாக கொடுத்துள்ளேன்.
Labels:
இருவர்
,
பொழுதுபோக்கு
Sunday, 6 July 2014
யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஷரபோவா அல்லது சச்சின் ?
வணக்கம்.
ஷரபோவா சச்சினை யாரென்று தெரியது என்று சொன்னது சச்சினுக்கு வேண்டுமானால் பெரிதாக இல்லாமல் இருக்கலம். ஆனால் அவரின் அடிபொடிகளாகிய சச்சின் ரசிகனுக்கு (வெறியர்களுக்கு என்றும் கூறலாம்) வேறு அனைத்தையும் விட முக்கியமான விடயம்.
ஷரபோவா சச்சினை யாரென்று தெரியது என்று சொன்னது சச்சினுக்கு வேண்டுமானால் பெரிதாக இல்லாமல் இருக்கலம். ஆனால் அவரின் அடிபொடிகளாகிய சச்சின் ரசிகனுக்கு (வெறியர்களுக்கு என்றும் கூறலாம்) வேறு அனைத்தையும் விட முக்கியமான விடயம்.
S.Ramani அவர்களின் பதிவில் ஒரு பெயரிலாத கொரில்லா(அதான் பெயரே இல்லையே, என்ன பெயர் சொன்னால் என்ன) இந்த கேள்வியைத் தான் கேட்டது. ரமணி அவர்களின் பதிவின் இணைப்பு கீழே...
http://ramaniecuvellore.blogspot.in/2014/07/blog-post_5.html
Labels:
சச்சின்
,
சமூகம்
,
பொழுதுபோக்கு
,
ஷரபோவா
Sunday, 29 June 2014
டிஷ்யூ பேப்பர்-ல் கையை துடைப்பவரா நீங்கள்?
வணக்கம்.
நீங்கள் அதிக அளவில் காகிதம் பயன்படுத்துபவரா.. அப்படியென்றால் உங்களுக்கு சமூகம்,சுற்றுச்சூழல் குறித்த அக்கரை குறைந்துள்ளது எனலாம். பெரும்பாலான உணவகங்களிலும், வணிக வளாகங்களிலும் டிஷ்யூ பேப்பர் எனப்படும் திசுத்தாள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. உலகில் காகித பயன்பாட்டுக்கு வெட்டப்படும் மரங்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் இந்த திசுத்தாள் எடுத்துக்கொள்கிறது. இதை உருவாககவும் சாதாரண தாளை விட அதிக அளவில் தண்ணீர் தேவை. ஒரு பக்கம் நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளையடிக்கும் பண்ணாட்டு நிறுவனங்கள், நம் நாட்டின் மலைப் பாங்கான இடங்களில் மரங்களை வெட்டி, கிடைக்கும் சொற்ப தண்ணீரையும் இப்படி வேறு வழியில் திருப்பிவிடுகின்றனர். இதுவரை நீங்கள் எவ்வளவு திசுத்தாளை பயன்படுத்தியிருப்பீர்கள். 5 வருடம் தினமும் திசுத்தாள் பயன்படுத்தும் ஒரு மனிதன் சாராசரியாக 10 மரங்களை அழித்துள்ளனர். இந்த திசுத்தாள் பயன்பாடடில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. அங்கு இதற்காகவே என மரங்களை வளர்த்தும் வருகின்றனர். ஆனால் நம் தாய்த்திரு(ட்டு) நாட்டில் இதை எதிர்பார்கக முடியுமா. பெயருக்காக மரங்களை வளர்த்துவிட்டு காடுகளில் மரங்களை வெட்டுவதே இங்கு நடைமுறை. இப்படிப்பட்ட நாட்டில் இருந்து தான் தனியாளாக சுமார் 30 ஆண்டுகளாக 1360 ஹெக்டேர் வனத்தை வளர்த்து பராமரித்து வருகிறார் ஒருவர்.
நீங்கள் அதிக அளவில் காகிதம் பயன்படுத்துபவரா.. அப்படியென்றால் உங்களுக்கு சமூகம்,சுற்றுச்சூழல் குறித்த அக்கரை குறைந்துள்ளது எனலாம். பெரும்பாலான உணவகங்களிலும், வணிக வளாகங்களிலும் டிஷ்யூ பேப்பர் எனப்படும் திசுத்தாள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. உலகில் காகித பயன்பாட்டுக்கு வெட்டப்படும் மரங்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் இந்த திசுத்தாள் எடுத்துக்கொள்கிறது. இதை உருவாககவும் சாதாரண தாளை விட அதிக அளவில் தண்ணீர் தேவை. ஒரு பக்கம் நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளையடிக்கும் பண்ணாட்டு நிறுவனங்கள், நம் நாட்டின் மலைப் பாங்கான இடங்களில் மரங்களை வெட்டி, கிடைக்கும் சொற்ப தண்ணீரையும் இப்படி வேறு வழியில் திருப்பிவிடுகின்றனர். இதுவரை நீங்கள் எவ்வளவு திசுத்தாளை பயன்படுத்தியிருப்பீர்கள். 5 வருடம் தினமும் திசுத்தாள் பயன்படுத்தும் ஒரு மனிதன் சாராசரியாக 10 மரங்களை அழித்துள்ளனர். இந்த திசுத்தாள் பயன்பாடடில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. அங்கு இதற்காகவே என மரங்களை வளர்த்தும் வருகின்றனர். ஆனால் நம் தாய்த்திரு(ட்டு) நாட்டில் இதை எதிர்பார்கக முடியுமா. பெயருக்காக மரங்களை வளர்த்துவிட்டு காடுகளில் மரங்களை வெட்டுவதே இங்கு நடைமுறை. இப்படிப்பட்ட நாட்டில் இருந்து தான் தனியாளாக சுமார் 30 ஆண்டுகளாக 1360 ஹெக்டேர் வனத்தை வளர்த்து பராமரித்து வருகிறார் ஒருவர்.
Labels:
இயற்கை
,
சமூகம்
,
சுற்றுச்சூழல்
Subscribe to:
Posts
(
Atom
)











