Sunday 19 May 2013

கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன?

உலகின் மூத்த சமூகமாகிய நாம், பல கலைகளில் சிறந்து விளங்கியுள்ளோம். குறிப்பாக கட்டடக்கலையில்!. தமிழ்நாட்டில் உள்ளதைப்போல் உலகில்  கட்டடக்கலையை  இந்த அளவுக்கு சிறப்பாக பயன்டுத்திய நாகரீகமாக  எகிப்து மற்றும் மெசபடோமிய நாகரீகங்களைக் கூறலாம். ஆனால் அவர்கள் உருவாக்கிய கட்டிடங்கள் இன்று சிதிலமடந்து காணப்படுகின்றன.

திருச்செந்தூர் முருகன்
கோபுரங்கள் தமிழனின்  கட்டடக்கலைக்கு மிக சரியான உதாரணம். கோபுரங்களின் வடிவமைப்பை கவனித்திருக்கிரீர்களா?. இரண்டு கையையும் கூப்பி வணக்கம் செலுத்துவது போல் செய்ய்யுங்கள். இது தான் கோபுரம்!!. நாம் கையெடுத்துக் கும்பிட்டால் , நம்மை திரும்பவும் கும்பிடும் வண்ணம் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கும்.கும்பிட்டு வணக்கம் செலுத்துவது தமிழரின் பாரம்பரியம், ஹாய் dude கலாசாரத்தில் நாம் மறந்துவிட்ட ஒன்று இது. கோபுரங்கள் எதற்காக கட்டப்பட்டன? வெறும் அழகுக்கு மட்டும் இல்லை, ஒரு மிகப்பெரிய தொழில்நுட்பம் கோபுரங்களில் ஒளிந்திருக்கின்றது.

திருச்செந்தூர் 


கோபுரங்கள் இருக்கும் ஊரிலேயே உயரமானதாய் அமைந்திருக்கும், அவற்றின் உச்சியில் கூர்மையான முனைகளைக் கொண்ட கலசங்களைப் பார்த்திருப்பீர்கள்.கலசங்களும் எதாவது வெள்ளம் வந்தால் தானியங்களை உயரத்தில் சேமித்து வைப்பதற்காகவே , கோபுரத்தின் உச்சியில் வைக்கப்பட்டன.கோபுரங்களின் வாசலில் மரத்தாலான கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும். இங்கு தான் இயற்பியலை எளிமையாகவும், பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏளிமையான ஒரு செய்முறை மூலம் இதை பார்கலாம். ஒரு சிறிய செப்பு(copper) கம்பி, அதன் ஒரு முனையை ஒரு மிங்கலனுடன் இணைக்கவும், இன்னொரு முனையில் சிறிய மரத்துண்டை வைத்து , அதை மண்ணில் படுமாறு வைத்தால், மின்னாற்றல் அப்படியே மண்ணுக்குள் சென்று மறைந்துவிடும். இது தான் இடிதாங்கி செயல்படும் முறை. இது தான் கோபுரங்களிலும் உள்ளது. கூர் முனைகளைக் கொண்ட கலசங்கள் மின்னாற்றலை கிரகித்து, அதை கோபுரத்தின் வழியாக செலுத்தி கதவுகள் வழியாக மண்ணுக்குள் செலுத்துகின்றன. இதனால் தான் இன்றும் கிராமங்களில் கோபுரங்களை விட உயரமாக வீடு கட்டக்கூடது என்று கூறுகிறார்கள். இடி வீட்டில் விழுந்துவிடும் என்பதற்காக.

 பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடிதாங்யை  தமிழர்கள் உருவக்கிவாக்கிவிட்டனர்.

@@அப்படீன்னா பெஞ்சமின் ஃப்ரங்க்ளின் கண்டுபிடுச்சது என்ன பஞ்சு முட்டாயா- னு mind voice la கேக்காதீங்க@@