Thursday 27 February 2014

ஐ.டி துறையில் நடப்பது என்ன ? வினவு தளம் தரும் உபதேசம்


நான் விரும்பிப் படிக்கும் தளங்களில் வினவு ஒன்று. ஆனால் அவர்கள் பிரச்சனைகளை சரியாக சொல்லிவிட்டு சில சமயம் சொல்லும் தீர்வுகள் தான் படு மொண்ணையாக இருக்கிறது.இப்பொழுது கூட உமா மகேஸ்வரி கொலையில் அனைத்தையும் அலசி விட்டு கடைசியில் முதலாளித்துவ எதிர்ப்பு, தொழிற்சங்கம் என பாட ஆரம்பித்துவிட்டனர்.

சரி, தகவல் தொழில்னுட்பத் துறை ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் அமைத்துக் கொடுத்தால் இந்த பிரச்சனை எல்லாம் சரியாகிவிடுமா?


Friday 14 February 2014

ராகுல் காந்தியும் கவுண்டமணியும் வாழைப்பழமும்.



Frankly Speaking with Arnab என்ற ஒரு நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி வந்திருந்தார். அர்னாப், ராகுலிடம் பல கேள்விகளை முன்வைக்கிறார், ஆனால் ராகுல் காந்தி சொன்ன பதில்கள் மூன்று விடயங்களை மட்டுமே சுற்றி வந்தது.
பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தகவல் அறியும் உரிமை சட்டம், எல்ல நிலைகளிலும் இருக்கும் தற்போதைய செயல்திட்டங்களையும், வேலை செய்யும் முறையையும் மாற்ற வேண்டும்.(கவனிக்கவும் எல்லா நிலைகளிலும்!!).

அவர் பேசியதை, நம் தலைவர் கவுண்டமணியுடன் இணைத்து ஒரு காணொளி உருவாக்கியுள்ளனர்.ஆங்கிலதில் உள்ள கணொளியை தமிழில் (முடிந்தவரை) மொழிபெயர்கிறேன். காணொளியையும் இணைத்துள்ளேன். பாத்து படிச்சு தெளிவாயுடுங்க.




இங்கே அர்னாப் -கு பதிலாக கவுண்டமணி என்று போட்டுள்ளேன்.

கவுண்டமணி: ராகுல், உங்களை Franly Speaking நிகழ்ச்சிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி!

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

கவுண்டமணி: !!!???? , சரி, உங்கள் 10 வருட அரசியல் வாழ்க்கையில் இது தான் முதல் முறையாக நீங்கள் தொலைக்கட்சிக்கு அளிக்கும் பேட்டி...ஏன் இவ்வளவு இடைவெளி ?

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: எனக்கு ஒரு வேண்டுகோள்...

ராகுல்: (பேசிக்கொண்டிருக்கும்போதே....) பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்ன கேட்டேன்?

ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்..

கவுண்டமணி: நிகழ்சிக்கு போவதற்கு முன் சில இதில் நாம் விவாதிக்கப்ப்போகும் அடிப்பையான விடங்களைப் பார்க்கலாம். சரியா?

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

கவுண்டமணி: ... உட்கார்... நான் உங்கிட்ட என்ன கேட்டேன்?

ராகுல்: நீங்க என்ன வேணும்னாலும் கேளுங்கள்.

கவுண்டமணி: காங்கிரஸ் கட்சி நீங்கள் வ்ந்ததும் அதன் இப்போதைய தடைகளை தாங்குமா?

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: (டென்சனாகிரார்!!).. அடேய்....  நான் உங்கிட்ட என்ன கேட்டேன்.. நீ என்ன பேசிட்டு இருக்க?

பாலையா: ஏன்ணே.. என்னாச்சு? ஏன் அவன போட்டு இப்பிடி படுத்துரீங்க?

கவுண்டமணி: நான் எவ்வளே பேரை பேட்டி எடுத்துருக்கேன். இவன மாதிரி ஒரு கல்லூளிமங்கனை பார்த்ததே இல்ல..

பாலையா: இப்பிடி கேட்டா அவன் எப்பிடி சொல்லுவான்.. இப்ப நான் கேக்குறேன். டேய், அண்ணா, உங்கிட்ட ஒரு கேள்வி கேட்டாரு ,

ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்..

பாலையா: குஜராத்-ல மோடி க்கு எதிரா என்ன வியூகம் வச்சிருக்க ?

ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்..  சொல்லுங்க.. நீங்க என்ன வேணும்னாலும் கேளுங்க?

பாலையா: நீ வந்ததுக்கு அப்புறம் காங்கிரஸ் ல என்ன பன்னனும்-னு இருக்க?

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: அடேய்... உன்ன.... யோவ், விடுங்கய்யா.. நானே கேக்குறேன். டேய் நான் உங்கிட்ட என்ன கேட்டேன்.

ராகுல்: கேளுங்கனே..

கவுண்டமணி: நீ உங்க கட்சில என்ன பண்ண போற? தெளிவா ஒரு பதில் சொல்லும்மா ராஜா...

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: டேய்.. இன்னிக்கு உன்ன கொல்லாம விட மாட்டேன்.. சார் புடிங்க சார் அவன..

இப்படி ஒரு மாங்கா மடையன் நம்ம நாட்டுக்கு பிரதமரா வந்தா... வெளங்கிரும்....



Thursday 13 February 2014

யுவன் ஷங்கர் ராஜவின் புதிய பெயர்

அனைவருக்கும் வணக்கம்!.

மீண்டும் இங்கே அனைவரும் அரைத்த மாவையே அரைத்து தோசை சுட போகிறேன்.யுவன் இசுலாமியரக பல மாதங்களாக வாழ்ந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான் தனது ட்விட்டர் கணக்கு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி பல தளங்களில் விவாதங்கள் நடைப்பெற்றுவிட்டன. யுவன் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறார் என செய்திகளும் வருகின்றன. அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றவோ , பிடித்த பெண்ணை மணம் முடிக்கவும் அவர்க்கு எல்லா வித உரிமையும் சுதந்திரமும் உள்ளது. அதில் மற்றவர்கள் மூக்கை நுழப்பது அநாகாரீகம்.


Friday 7 February 2014

ஆறாம் திணை. நண்டு ஊறுதும் நரி ஊறுதும்....

ஆறாம் திணை. ஆனந்த விகடனில் உருப்படியாய் வரும் ஒரு தொடர் கட்டுரை. இந்த வாரம் இதில் மருத்துவர்.சிவராமன் செயற்கை உணவுகள் மற்றும் குழந்தகளுக்கு உடல் உழைப்பு இல்லாமை பற்றி குறிப்பிட்டிருந்தார்.

கட்டுரையின் கடைசி பத்தியை வாசித்தேன். இந்த முறையில் தழிழ்நாட்டில் சாப்பிட்ட கடைசி தலைமுறையை சார்ந்ததாலோ என்னவோ (கிராமங்களில் கூட இப்பொழுதெல்லம் பார்க்க முடிவதில்லை), இதை பகிர வேண்டும் என்று தோன்றியது..

நீங்களும் வாசிக்கவும்...

குழந்தையின் மென்மையான உள்ளங்கையை சமையல் களமாக்கி 'இது இட்லி,இது சாம்பார் சாதம்,இது கத்தரிக்காய் பொரியல்,இது தயிர்ச் சோறு...' என ஒவ்வொரு விரலாக மடித்து,அம்மாவுக்கு ஒரு வாய்,அப்பவுக்கு ஒரு வாய்,பாட்டிக்கு ஒரு வாய்,தாத்தாவுக்கு ஒரு வாய்,அப்புறம் தொழுவத்துல உள்ள கன்னுகுட்டிக்கு ஒரு வாய், அப்புறமா இந்த செல்லக்குட்டிக்கு' என நண்டு ஊறுது, நரி ஊறுது எனச் சொல்லி மகிழ்வித்து உறவை உயிரைப் போற்றி உணவூட்ட்டிய சமூகம் இது.

இதன் அக்கரை தரும் சுவையையும்,பயனையும் எந்த உப்பு, உயர் புட்டி உணவும் தந்துவிடவ முடியாது

Monday 3 February 2014

சூப்பர் சிங்கர் 4- திவாகர் எப்படி பட்டத்தை கைப்பற்றினார்?

பல பேர் பல பதிவுகளை எழுது தள்ளிவிட்டனர் இதைப் பற்றி.. நான் கொஞ்சம் தாமதம். இருந்தாலும் எதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

முதலில் சூப்பர் சிங்கரில் இந்த ஓட்டு மூலம் ஒரு நல்லது நடந்தது போல் இருக்கிறது. என்ன என்கிறீர்களா? திறமைக்கு மதிப்பு கிடைத்துள்ளது. பதிவான ஓட்டுகளில் எப்படி கிட்டத்தட்ட 80 சதவீதம் திவாகருக்கு போனது?