Saturday 28 September 2013

இந்தியக் குழந்தைகளுக்கு பில் கேட்ஸ் செய்தது என்ன?

பில் கேட்ஸ். இந்த பெயரை கேள்விப்படாதவர்கள் கண்டிப்பாக உலகில் உண்டு. நம் சமூகம் வெளிநாட்டவர் என்றால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவது வாடிக்கை என்றாலும் இவரை முன்மாதிரியாக கொண்ட பல இளைஞர்களை உருவாக்கிய பெருமை நம் நாட்டிற்கே!. பில் கேட்ஸை உங்களுக்கு பிடிக்கும் என்றால் இந்த இடுகையை இதற்கு மேல் தொடரதீர்கள். :-(



மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை இவர் ஆரம்பித்ததும், விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவியதும் இவரின் சாதனைகளாக சொல்லப்படுகின்றன. ஒரு சினிமாவை காப்பி அடிப்பதையே அறிவுத்திருட்டாக நினைக்கும் நாம், ஒட்டுமொத்த விண்டோஸ் இயங்கு தளத்தின் தொடக்ககால நிரல்கள் பல "யுனிக்ஸ்" எனப்படும் திறந்த மென்பொருளின் நிரல்களிலிருந்தும், சுட்டி(mouse) இணைப்பு நிரல்கள் மாகிண்டாஷ்  கணிகளில் இருந்தும் கவரப்பட்டவை.பிறகு இந்த இரண்டு இயங்கு தளங்களும் மீண்டு வந்தது தனி கதை. இந்த இடுகை பில் கேட்ஸ் இந்திய குழந்தைகளை பரிசோதனை எலிகளாக பண்ணாட்டு மருந்து நிறுவனங்களுக்கு நமது அரசின் சகல வசதிகளோடும் தாரை வார்த்துக்கொடுத்துக் கொண்டிருப்பதைப் பற்றியதால் -கேட்ஸ்-க்கு இந்த மாதிரியான ஒரு அறிமுகம் .

அமெரிக்காவில் ஆட்டிசம் பாதித்த குழந்தகளுக்கு என தனி பள்ளிகள் இயங்கி வருகின்றன.இங்கே இவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி, உணவுகள், மற்றும் சமூகத்தை எதிர்கொள்ளும் முறை முதலியவை பயிற்றுவிக்கப்படுகின்றன. இது நல்ல விடயம், நம் நாட்டிலும் இது போன்ற பள்ளிகள் வேண்டும் என நீங்கள் நினைத்தால் கண்டிப்பாக உங்களை குழந்தைகள் மன்னிக்க மாட்டார்கள். சரி அமெரிக்காவில் ஏன் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு என இத்தனை பள்ளிகள்?. உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத் தானே ஆகவேண்டும். 1980-களில் பத்து என்ற எண்ணிக்கையில் இருந்த குழந்தைகளின் தடுப்பூசிகளின் எண்ணிக்கை இப்பொழுது 36. 80-களில் 1/10000 என்ற ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் சராசரி இப்பொழுது 1/150. அதாவது சராசரியாக 150 குழந்தைகளில் ஒரு குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முழுமையான காரணம் தடுப்பூசிகளே.

தடுப்பு மருந்துகள் நீண்ட நாட்கள் பாதுகாக்கப்பட "திம்மர்சால்" என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது தான் குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தி வளர்ச்சி குறைபாடுகளை உண்டாக்குகிறது. பல மனசாட்சியுள்ள மருத்துவர்கள் தொடர்ந்து போராடியதின் விளைவாக 90-களில் திம்மர்சால் அமெரிக்க மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டது. ஆனால் இந்தியாவில் மட்டும் தொடர்ந்து பயன்பாட்டில் உள்ளது. நம் அரசு அதிகாரிகள் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு இந்த கொடிய நஞ்சினை அனுமதித்துள்ளனர். குழந்தைகளுக்கு சாதாரன இருமல் மருந்தாக கொடுக்கப்படும் "டானிக்"குகளிலும் இது கலந்திருப்பது தான் வேதனை. அமெரிக்க அரசு திம்மசாலை தடை செய்தாலும் தடுப்பு மருந்துகள் இன்னும் பயன்பாட்டில் தான் உள்ளன. குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுக்காத பெற்றோரை சிறையில் தள்ளி குழந்தைகளை காப்பகத்தில் வைத்து தடுப்பு மருந்து கொடுப்பது என பண்ணாட்டு மருந்து நிறுவனங்களுக்கு அடியாள் வேலை பர்த்துக்கொண்டிருக்கிறது அமெரிக்க அரசு. ஆனால் ஒரே ஆறுதலான விடயம், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சரியான இழப்பீடும் நிவாரனமும் அரசு செய்து கொடுக்க வேண்டும், ஆனால் இதுவும் மக்களின் வரிப்பணத்தில் தான் செய்யப்படுகின்றதே தவிர பிரச்சனைக்குரிய தடுப்பு மருந்துகளை தடை செய்ய முடியவில்லை. இந்தியாவில் இதை கனவிலும் நினைத்து பார்க்க முடியாது. பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்காலமும், பெற்றேரின் சேமிப்பும் அதோடு முடிந்துவிடும்.

தடுப்பூசிகளின் கோர முகம் வெளியே தெரிந்த பின் அமெரிக்காவில் இப்பொழுது யாரும் தேவையில்லாத தடுப்பு மருந்துகளை போட்டுக்கொள்வதில்லை. விளைவு மருந்து நிறுவனங்களுக்கு இறங்கு முகம். இங்கு தான் நம் தலைவர் பில் கேட்ஸ் வருகிறார். சிறந்த வியாபாரியான இவருக்கு திடீரென இந்திய குழந்தைகளின் மேல் கரிசனம். எந்த மருந்தை வைத்து வியாபாரம் பண்ணினால் வருமானம் அதிகம் வரும் என கணித்த அவர் தேர்ந்தெடுத்தது "Hepatitis" எனப்படும் மஞ்சள் காமாலை. இதன் வணிகம் மிகப்பெரியது. காமாலையில் ஆங்கில மருத்துவப்படி  ஏ,பி,சி,டி,ஈ என ஐந்து வகை உண்டு. இதில் ஏ , பி -க்கு மட்டுமே தடுப்பூசி உள்ளது. பி யின் தடுப்பூசியே சி, டி யை குணப்படுத்துவிடும் என்று கூறப்படுகிறது. இதில் ஏ -க்கு தடுப்பூசியே தேவையில்லை என்பது பல மருத்துவர்கள் கருத்து. ஏனெனில் இது ஈரல் வைரசினால் வருவது. அந்த வைரஸ் அழிந்து விட்டால் காமாலையும் போய்விடும், இந்த வைரசின் ஆயுள் மிக குறுகியது. இப்பொழுது எஞ்சி இருப்பது பி-க்கான தடுப்பூசி மட்டுமே.

இந்த பி-க்கான தடுப்பு மருந்து மூன்று கட்டங்களக போட வேண்டும். இதுவும் குழந்தைகளுக்கு  தீங்கு செய்பவை என அமெரிக்கவில் தடை செய்யப்பட்டது. ஆனால் தடை செய்யப்பட்ட பின் பில் கேட்ஸ் ஆந்திர மாநில அரசுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு இதில் முதல் தவனை மட்டும் இலவசமாக தமது கேட்ஸ் அறக்கட்டளையின் நிதியிலிருந்து கொடுத்தார். அப்போ மீதி இரண்டு தவணை யார் போடுவார்கள் என்கிறீர்களா?. வேறு யார் ஆந்திர அரசாங்கம் தான், அரசாங்கம் கையை விரித்தால் ஏழைகள் தான் தண்டம் அழ வேண்டும். இரண்டு தவணைகளை போடாமல் விட்டாலும் ஆபத்து, ஒவ்வாமை வந்து விடும் என்கிறார்கள். சரி கேட்ஸ் ஏன் இந்திய குழந்தைகளின் மேல் அக்கறை கொண்டு முதல் தவனை மருந்தை இலவசமாக போட்டார்?. எப்படியும் கண்டிப்பாக மீதி இரண்டு தவனைகளையும் நாம் நமது கைக்காசை வைத்து தான் போட வேண்டும் மருந்து நிறுவனத்தின் லாபம் இதனால் பாதுகாக்கப்படும், ஏனெனில் வருடத்திற்கு பல பில்லிய்ஸ்ன் டாலர் வருமானம் ஈட்டி வந்த நிறுவனம் இந்த தட்டையால் தள்ளாடியது. இதில் முழு பூசனிக்காயை சோற்றில் மறைத்த விடயம் என்னவென்றால், இந்த நிறுவனத்தின் 50 சதவிகித பங்குகளை கேட்ஸ் அறக்கட்டளை வங்கியிருந்தது தான். ஒரு மோசமான முதலாளித்துவத்தை ஆதரிக்கும் மனிதரின் செயல்களுக்கு இது ஒரு நல்ல உதாரணம்.

இந்த மருந்தால் என்ன பாதிப்புகள் பின் விளைவுகள் வரும்?.வலிப்பு, இடுப்பு மற்றும் நரம்பு வலி, பார்வைக் குறைபாடு, மூளை வளர்சி குறைவு, முக ஜன்னி, மூட்டுகள் பாதிக்கப்படுதல் என இதன் பட்டியல் நீள்கிறது. இந்த தடுப்பு மருந்துகளை  யாருக்கெல்லாம் போட கூடது என ஒரு வரைமுறை உள்ளது. 14 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள், எடை குறைவாக உள்ளவர்கள், சளி தொல்லை, ஒவ்வாமை உள்ளவர்கள்,சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என சராசரி இந்தியக் குழந்தைகள் அனைவரையும் இதில் பொருத்தலாம். மஞ்சள் காமாலை ஒரு நோய் இல்லை , நோய் அறிகுறி தான். ஈரல் குறைபாடுகள், பித்தப்பையில் கல் போன்றவற்றின் அறிகுறி தான் காமாலை எங்கின்றனர் மருத்துவர்கள். நோயை குணப்படுத்திவிட்டால் காமாலை மறைந்துவிடும் ஆனால் நம் நலம் விரும்பும் அரசோ இதை ஒரு நோயாக உருவகப்படுத்தி பண்ணாட்டு முதாலாலிகளின் நலனுக்கு தனது மக்களின் நலனை பணையம் வைக்கிறது. பிறந்த 4 கிலோ எடை உள்ள ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு ஒரு தடுப்பூசி போடுவது வளர்ந்த ஒரு மனிதனுக்கு 40 ஊசிகள் போடுவதற்கு சமமானது எங்கின்றனர் "மருத்துவர்கள்". நாம் குழந்தைகளின் மேல்  எவவளவு பெரிய வன்முறைகளை சத்தமின்றி நடத்திக்கொண்டிருக்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி. மேலும் இந்த தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என அதன் அட்டையில் "Sudden Infant Death Syndrome" என மருத்துவ மொழியில் அச்சடிக்கப்பட்டிருக்கும், இதன் அர்த்தம் குழந்தை இறந்தும் போகலாம் என்பதே.

மலிவு விலையில் குழந்தைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக இந்தியாவை மற்றிய பெருமை கேட்ஸ் அவர்களையே சேரும்.. கடைசியாக ஒரு  வேண்டுகோள். குழந்தகளின் மேல் நடத்தப்படும் இந்த உயிரி தாக்குதலில் இருந்து உங்களால் முடிந்த வரை குழந்தை,களுக்கு உதவுங்கள். அவர்களின் சிரிப்பு இயற்கையாய் வரவேண்டும்...

6 comments :

  1. @maasianna
    Welcome...
    This is what our government doing all these days making a generated of india with all disabilities..

    ReplyDelete
  2. அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு வேண்டுகோள். நீங்கள் சொன்ன பல தகவல்களுக்கான ஆதார URL களை இணைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.

      பூவுலகின் நண்பர்கள் மற்றும் எதிர் வெளியேடு பதிப்பகம் இணைந்து வெளியிட்ட "திருடப்பட்ட தேசம்" என்ற நூலில் குறிப்பிடப்பட்ட செய்திகளை அடிப்படையாய் வைத்து தான் இந்த இடுகையை எழுதினேன். உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த புத்தகத்தை நீங்களும் படித்து , உங்கள் நண்பர்களுக்கும் கொடுக்கவும். குழந்தைகளை காப்பாற்ற இணைந்திடுவோம்...

      Delete
  3. அதிர்ச்சி ஊட்டும் தகவல்கள். பகிர்வுக்கு்நன்றி.
    உங்கள் பதிவின் தலைப்பை "நம் குழந்தைகளை கொல்ல பில்கேட்ஸ் - இந்தியா கூட்டுச் சதி அம்பலம்!" என மாற்றிப் போடுங்கள். கண்டிப்பாக நிறைய பேர் படித்து விழிப்புணர்வு பெறுவர்.

    ReplyDelete
    Replies
    1. வருக மாசிலா அவர்களே.!

      //"நம் குழந்தைகளை கொல்ல பில்கேட்ஸ் - இந்தியா கூட்டுச் சதி அம்பலம்!" // தங்கள் கருத்துக்கு நன்றி. ஆனால் இடுகையில் இதைப் பற்றி குறிப்பிடாததால் தலைப்பை மாற்ற இயலவில்லை. மன்னிக்கவும்...

      Delete