Friday 14 February 2014

ராகுல் காந்தியும் கவுண்டமணியும் வாழைப்பழமும்.



Frankly Speaking with Arnab என்ற ஒரு நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி வந்திருந்தார். அர்னாப், ராகுலிடம் பல கேள்விகளை முன்வைக்கிறார், ஆனால் ராகுல் காந்தி சொன்ன பதில்கள் மூன்று விடயங்களை மட்டுமே சுற்றி வந்தது.
பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தகவல் அறியும் உரிமை சட்டம், எல்ல நிலைகளிலும் இருக்கும் தற்போதைய செயல்திட்டங்களையும், வேலை செய்யும் முறையையும் மாற்ற வேண்டும்.(கவனிக்கவும் எல்லா நிலைகளிலும்!!).

அவர் பேசியதை, நம் தலைவர் கவுண்டமணியுடன் இணைத்து ஒரு காணொளி உருவாக்கியுள்ளனர்.ஆங்கிலதில் உள்ள கணொளியை தமிழில் (முடிந்தவரை) மொழிபெயர்கிறேன். காணொளியையும் இணைத்துள்ளேன். பாத்து படிச்சு தெளிவாயுடுங்க.




இங்கே அர்னாப் -கு பதிலாக கவுண்டமணி என்று போட்டுள்ளேன்.

கவுண்டமணி: ராகுல், உங்களை Franly Speaking நிகழ்ச்சிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி!

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

கவுண்டமணி: !!!???? , சரி, உங்கள் 10 வருட அரசியல் வாழ்க்கையில் இது தான் முதல் முறையாக நீங்கள் தொலைக்கட்சிக்கு அளிக்கும் பேட்டி...ஏன் இவ்வளவு இடைவெளி ?

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: எனக்கு ஒரு வேண்டுகோள்...

ராகுல்: (பேசிக்கொண்டிருக்கும்போதே....) பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: நான் உங்கிட்ட என்ன கேட்டேன்?

ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்..

கவுண்டமணி: நிகழ்சிக்கு போவதற்கு முன் சில இதில் நாம் விவாதிக்கப்ப்போகும் அடிப்பையான விடங்களைப் பார்க்கலாம். சரியா?

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

கவுண்டமணி: ... உட்கார்... நான் உங்கிட்ட என்ன கேட்டேன்?

ராகுல்: நீங்க என்ன வேணும்னாலும் கேளுங்கள்.

கவுண்டமணி: காங்கிரஸ் கட்சி நீங்கள் வ்ந்ததும் அதன் இப்போதைய தடைகளை தாங்குமா?

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: (டென்சனாகிரார்!!).. அடேய்....  நான் உங்கிட்ட என்ன கேட்டேன்.. நீ என்ன பேசிட்டு இருக்க?

பாலையா: ஏன்ணே.. என்னாச்சு? ஏன் அவன போட்டு இப்பிடி படுத்துரீங்க?

கவுண்டமணி: நான் எவ்வளே பேரை பேட்டி எடுத்துருக்கேன். இவன மாதிரி ஒரு கல்லூளிமங்கனை பார்த்ததே இல்ல..

பாலையா: இப்பிடி கேட்டா அவன் எப்பிடி சொல்லுவான்.. இப்ப நான் கேக்குறேன். டேய், அண்ணா, உங்கிட்ட ஒரு கேள்வி கேட்டாரு ,

ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்..

பாலையா: குஜராத்-ல மோடி க்கு எதிரா என்ன வியூகம் வச்சிருக்க ?

ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்..  சொல்லுங்க.. நீங்க என்ன வேணும்னாலும் கேளுங்க?

பாலையா: நீ வந்ததுக்கு அப்புறம் காங்கிரஸ் ல என்ன பன்னனும்-னு இருக்க?

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: அடேய்... உன்ன.... யோவ், விடுங்கய்யா.. நானே கேக்குறேன். டேய் நான் உங்கிட்ட என்ன கேட்டேன்.

ராகுல்: கேளுங்கனே..

கவுண்டமணி: நீ உங்க கட்சில என்ன பண்ண போற? தெளிவா ஒரு பதில் சொல்லும்மா ராஜா...

ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

கவுண்டமணி: டேய்.. இன்னிக்கு உன்ன கொல்லாம விட மாட்டேன்.. சார் புடிங்க சார் அவன..

இப்படி ஒரு மாங்கா மடையன் நம்ம நாட்டுக்கு பிரதமரா வந்தா... வெளங்கிரும்....



8 comments :

  1. Replies
    1. வாங்க... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

      Delete
  2. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. வணக்கம்
    நகைச்சுவையாக நல்ல கருத்தை எடுத்துரைத்துள்ளிர்கள் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன்,

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. நகைச்சுவையாக நல்ல கருத்தை எடுத்துரைத்துள்ளிர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete