வணக்கம்.
யுடோபியா என்றொரு கற்பனை சமூகம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
சர்.தாமஸ் மோர் என்ற எழுத்தாளர் 15-ம் நூற்றாண்டில் தனது கதையில் இந்த கற்பனை சமூகத்தைக் குறித்து எழுதினார். இந்த சமூகம் மிக உயரிய கொள்கைகளையும் மனித உரிமைகளையும் கொண்டது. "Ideal Soceity" என்று சொல்வார்கள், மிகச் சிறந்த சட்டங்களை கொண்ட இந்த சமூகத்தில் அமைதியும் வளமும் நிறந்து வழிந்தன.
இதன் சுற்றுச்சூழல், மேற்கேத்தைய வாழ்க்கைச் சூழலில் இருந்து பெரிதும் மாறுபட்டது, இயற்கையோடு ஒத்து வாழ்வது. யுடோபியாவின் பொருளாதார மாதிரியை பல கம்யுனிச, பொருளாதார அறிஞர்களும் வரவேற்றுள்ளனர். மிக முக்கியமாக பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்த சமூகம். பலதரப்பட்ட மதங்களைப் பின்பற்றும் மக்கள் ஒற்றுமையுடனும், நமது தற்போதைய அறிவியல் தொழில்நுட்ப கருத்துக்களை ஒத்த வளர்ச்சியையும் கொண்டுள்ளது. போர்களின்றி அமைதியுடன் வாழும் விழுமியங்களை கொண்டிருந்ததாக இச்சமூகம் வடிவமைக்கப்பட்டது. இப்படி பல சிறப்புகளை வாய்ந்தது யுடோபியா சமூகம். இதைப் பற்றி சொல்ல ஒரு தனி பதிவே தேவைப்படும்.
யுடோபியா சமூகம், அப்படியே அதற்கு நேர்மாறான மற்றொரு சமூகத்தையும் தோற்றுவித்தது. டிஸ்டோபியா. எங்கும் பொய், பொறாமை, குழப்பம், சுயநலம் போன்ற குணங்கள் நிறைந்திருந்த இதன் அழிவினை கீழேயுள்ள படங்களில் காணலாம்.
டிஸ்டோபியா சமூகம் என்று ஒன்று இருந்தால் அதன் அழிவு எப்படி இருக்கும் என இந்த படங்கள் காண்பிக்கின்றன. நமது தற்போதைய நிலைக்கும் இதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. கண்டிப்பாக இது ஒரு நாள் நடக்கத்தான் போகிறது நம் சமூகம் அதன் தற்போதைய கோட்பாடுகளை கைவிடாவிட்டால்.
இந்த படங்கள் எல்லாம் மினியேச்சர் என்னும் மாதிரிகள். அழிந்து போன நகரத்தை அப்படியே கொண்டுவந்துள்ளனர். கீழேயுள்ள படங்களைப் பாருங்கள், இவை எவ்வளவு சிறியவை என்று தெரியும்
என்ன நம்ப முடிகிறதா!!!
Sunday, 5 October 2014
நம்பமுடியாத படங்கள்- மோசமாக கட்டமைக்கப்பட்ட நமது சமூகத்தின் முடிவு
Labels:
அரசியல்
,
சமூகம்
,
பொழுதுபோக்கு
Friday, 1 August 2014
தமிழ்மணத்தின் டெம்ப்ளேட் பதிவர்கள்.
வணக்கம்.
வலைப்பூ திரட்டிகளில் பலராலும் பயன்படுத்தப்படும் தமிழ்மணம் சில மாதங்களாகவே ஒரு மாதிரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. தொடர்ந்து படிப்பவர்கள் இதை கவனித்திருக்கலாம். பதிவுகளை வகைப்படுத்தி தேடி படித்தாலும் இதே கதை தான். நன்கு அறியப்பட்ட பதிவர்களின் பதிவுகள் திரட்டிகள் இல்லாமலே பலராலும் படிக்கப்படும். ஆனால் புதிதாக எழுதுபவர்களுக்குத் தான் சிக்கல். பல மாதங்களாகவே "டெம்ப்ளேட்" பதிவர்களின் அலப்பறை இங்கே தாங்க முடியவில்லை.
வலைப்பூ திரட்டிகளில் பலராலும் பயன்படுத்தப்படும் தமிழ்மணம் சில மாதங்களாகவே ஒரு மாதிரியாகப் போய்க்கொண்டிருக்கிறது. தொடர்ந்து படிப்பவர்கள் இதை கவனித்திருக்கலாம். பதிவுகளை வகைப்படுத்தி தேடி படித்தாலும் இதே கதை தான். நன்கு அறியப்பட்ட பதிவர்களின் பதிவுகள் திரட்டிகள் இல்லாமலே பலராலும் படிக்கப்படும். ஆனால் புதிதாக எழுதுபவர்களுக்குத் தான் சிக்கல். பல மாதங்களாகவே "டெம்ப்ளேட்" பதிவர்களின் அலப்பறை இங்கே தாங்க முடியவில்லை.
Friday, 25 July 2014
எம்.ஜி.ஆர் -ருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்.
வணக்கம்.
எம்.ஜி.ஆர் - ஏ.ஆர்.ரகுமான் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்கள். ஆனால் எம்.ஜி.ஆருக்கு ரகுமான் ஒரு பாடல் இல்லை கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் இசையமைத்துள்ளார்.
நான்கில் எனக்கு பிடித்த ஒரு மெலோடி பாடலை கீழே காணொளியாக கொடுத்துள்ளேன்.
எம்.ஜி.ஆர் - ஏ.ஆர்.ரகுமான் இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்கள். ஆனால் எம்.ஜி.ஆருக்கு ரகுமான் ஒரு பாடல் இல்லை கிட்டத்தட்ட நான்கு பாடல்கள் இசையமைத்துள்ளார்.
நான்கில் எனக்கு பிடித்த ஒரு மெலோடி பாடலை கீழே காணொளியாக கொடுத்துள்ளேன்.
Labels:
இருவர்
,
பொழுதுபோக்கு
Sunday, 6 July 2014
யாருக்கு ரசிகர்கள் அதிகம் ஷரபோவா அல்லது சச்சின் ?
வணக்கம்.
ஷரபோவா சச்சினை யாரென்று தெரியது என்று சொன்னது சச்சினுக்கு வேண்டுமானால் பெரிதாக இல்லாமல் இருக்கலம். ஆனால் அவரின் அடிபொடிகளாகிய சச்சின் ரசிகனுக்கு (வெறியர்களுக்கு என்றும் கூறலாம்) வேறு அனைத்தையும் விட முக்கியமான விடயம்.
ஷரபோவா சச்சினை யாரென்று தெரியது என்று சொன்னது சச்சினுக்கு வேண்டுமானால் பெரிதாக இல்லாமல் இருக்கலம். ஆனால் அவரின் அடிபொடிகளாகிய சச்சின் ரசிகனுக்கு (வெறியர்களுக்கு என்றும் கூறலாம்) வேறு அனைத்தையும் விட முக்கியமான விடயம்.
S.Ramani அவர்களின் பதிவில் ஒரு பெயரிலாத கொரில்லா(அதான் பெயரே இல்லையே, என்ன பெயர் சொன்னால் என்ன) இந்த கேள்வியைத் தான் கேட்டது. ரமணி அவர்களின் பதிவின் இணைப்பு கீழே...
http://ramaniecuvellore.blogspot.in/2014/07/blog-post_5.html
Labels:
சச்சின்
,
சமூகம்
,
பொழுதுபோக்கு
,
ஷரபோவா
Sunday, 29 June 2014
டிஷ்யூ பேப்பர்-ல் கையை துடைப்பவரா நீங்கள்?
வணக்கம்.
நீங்கள் அதிக அளவில் காகிதம் பயன்படுத்துபவரா.. அப்படியென்றால் உங்களுக்கு சமூகம்,சுற்றுச்சூழல் குறித்த அக்கரை குறைந்துள்ளது எனலாம். பெரும்பாலான உணவகங்களிலும், வணிக வளாகங்களிலும் டிஷ்யூ பேப்பர் எனப்படும் திசுத்தாள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. உலகில் காகித பயன்பாட்டுக்கு வெட்டப்படும் மரங்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் இந்த திசுத்தாள் எடுத்துக்கொள்கிறது. இதை உருவாககவும் சாதாரண தாளை விட அதிக அளவில் தண்ணீர் தேவை. ஒரு பக்கம் நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளையடிக்கும் பண்ணாட்டு நிறுவனங்கள், நம் நாட்டின் மலைப் பாங்கான இடங்களில் மரங்களை வெட்டி, கிடைக்கும் சொற்ப தண்ணீரையும் இப்படி வேறு வழியில் திருப்பிவிடுகின்றனர். இதுவரை நீங்கள் எவ்வளவு திசுத்தாளை பயன்படுத்தியிருப்பீர்கள். 5 வருடம் தினமும் திசுத்தாள் பயன்படுத்தும் ஒரு மனிதன் சாராசரியாக 10 மரங்களை அழித்துள்ளனர். இந்த திசுத்தாள் பயன்பாடடில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. அங்கு இதற்காகவே என மரங்களை வளர்த்தும் வருகின்றனர். ஆனால் நம் தாய்த்திரு(ட்டு) நாட்டில் இதை எதிர்பார்கக முடியுமா. பெயருக்காக மரங்களை வளர்த்துவிட்டு காடுகளில் மரங்களை வெட்டுவதே இங்கு நடைமுறை. இப்படிப்பட்ட நாட்டில் இருந்து தான் தனியாளாக சுமார் 30 ஆண்டுகளாக 1360 ஹெக்டேர் வனத்தை வளர்த்து பராமரித்து வருகிறார் ஒருவர்.
நீங்கள் அதிக அளவில் காகிதம் பயன்படுத்துபவரா.. அப்படியென்றால் உங்களுக்கு சமூகம்,சுற்றுச்சூழல் குறித்த அக்கரை குறைந்துள்ளது எனலாம். பெரும்பாலான உணவகங்களிலும், வணிக வளாகங்களிலும் டிஷ்யூ பேப்பர் எனப்படும் திசுத்தாள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. உலகில் காகித பயன்பாட்டுக்கு வெட்டப்படும் மரங்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் இந்த திசுத்தாள் எடுத்துக்கொள்கிறது. இதை உருவாககவும் சாதாரண தாளை விட அதிக அளவில் தண்ணீர் தேவை. ஒரு பக்கம் நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளையடிக்கும் பண்ணாட்டு நிறுவனங்கள், நம் நாட்டின் மலைப் பாங்கான இடங்களில் மரங்களை வெட்டி, கிடைக்கும் சொற்ப தண்ணீரையும் இப்படி வேறு வழியில் திருப்பிவிடுகின்றனர். இதுவரை நீங்கள் எவ்வளவு திசுத்தாளை பயன்படுத்தியிருப்பீர்கள். 5 வருடம் தினமும் திசுத்தாள் பயன்படுத்தும் ஒரு மனிதன் சாராசரியாக 10 மரங்களை அழித்துள்ளனர். இந்த திசுத்தாள் பயன்பாடடில் முதலிடத்தில் உள்ளது அமெரிக்கா. அங்கு இதற்காகவே என மரங்களை வளர்த்தும் வருகின்றனர். ஆனால் நம் தாய்த்திரு(ட்டு) நாட்டில் இதை எதிர்பார்கக முடியுமா. பெயருக்காக மரங்களை வளர்த்துவிட்டு காடுகளில் மரங்களை வெட்டுவதே இங்கு நடைமுறை. இப்படிப்பட்ட நாட்டில் இருந்து தான் தனியாளாக சுமார் 30 ஆண்டுகளாக 1360 ஹெக்டேர் வனத்தை வளர்த்து பராமரித்து வருகிறார் ஒருவர்.
Labels:
இயற்கை
,
சமூகம்
,
சுற்றுச்சூழல்
Friday, 20 June 2014
ஈராக் படுகொலைகள்... ஆவணப்படம் வெளியீடு. 21 +
ஈராக் , சிரியா உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் கலகத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கொலைக்களத்தில் பதிவான காட்சிகளை இணைத்து காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. பலர் ஈவிரக்கம் இன்றி சுட்டுக் கொல்லப்படுவதும், தலைகளை கொய்வதும் என பார்த்தாலே குலை நடுங்கச் செய்யும் காட்சிகளை கொண்டுள்ளது இக்காணொளி.
கொலைக்களத்தில் பதிவான காட்சிகளை இணைத்து காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது. பலர் ஈவிரக்கம் இன்றி சுட்டுக் கொல்லப்படுவதும், தலைகளை கொய்வதும் என பார்த்தாலே குலை நடுங்கச் செய்யும் காட்சிகளை கொண்டுள்ளது இக்காணொளி.
Sunday, 15 June 2014
வலைப்பூக்களில் இருந்து தகவல்களைத் திருடுவது எப்படி?
வணக்கம்!!!
பண்ணாட்டு நிறுவனங்க்கள் பல தகவல் மேலாண்மை மென்பொருட்களை பயன்படுத்தினாலும், சாதாரண பயனாளர்களின் தகவல் மேலாண்மைக்கு பெரும் உதவியாக இருப்பவை வலைப்பூக்கள்.இவற்றை பலதரப்பட்ட தகவல்களை சேமிக்க பயன்பதுத்தும் போதும் இதனை வடிவமைத்த நிறுவனங்கள் முறையான பாதுகாப்பு மற்றும் காப்புரிமை பற்றி பயனாளர்களுக்கு சுலபமாக தெரியும் அளவிற்கு தகவல்களை தெரிவிப்பதில்லை. உதாரணமாக, "Blogger" சேவையை எடுத்துக்க் கொண்டால் ஒவ்வொரு Blogger வலைப்பூவும் அதன் தனிப்பட்ட காப்புரிமையுடனே வருகிறது. ஆனால் தகவல் திருட்டு நடந்துகொண்டு தான் உள்ளது. எனவே பயனாளர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் வலைப்பூவில் "Copy/paste" செய்யும் விருப்பத்தேர்வை கூட முடக்கிவிடுகிறார்கள்.
சரி, நேரிடையாக விடயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட வலைப்பூக்களில் உள்ள தகவல்களை எப்படி "Copy/Paste" செய்வது. மக்களே இதுவும் ஒரு திருட்டு தான், அறிவுத் திருட்டு.

Labels:
அறிவியல்
,
தகவல் தொழில்நுட்பம்
Monday, 9 June 2014
அமெரிக்கர்களுக்கு இதுவரை கிடைக்காத உரிமைகள் !!!
வணக்கம்... !
இரண்டாம் உலகப் போர் முடிவுறும் நேரம். அமெரிக்க அதிபர்கள் நாட்டு மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வருங்காலத்தில் செய்ய,திட்டமிட வேண்டியவற்றை பற்றி அறிவிப்பது வழக்கம். இதை "State of Union Address" என்பார்கள். 1944-ம் ஆண்டு , அப்போதைய அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் போர் முடிந்த பின் நாட்டு மக்கள் எதை நோக்கி செல்ல வேண்டும் என்பதனை நாட்டு மக்கள் அனைவருக்கும் வானொலியில் அறிவித்தார். உடல்நலம் குன்றியிருந்ததால் நேரிடையாக வர இயலாமல் வானொலியில் வந்தார். ஆனால் அவரின் உரையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் நாட்டு மக்கள் அனைவரும் பார்க்கும்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார். அது அமெரிக்கர்களுக்கான "இரண்டாம் உரிமைச் சட்டம்".
ரூஸ்வெல்ட் கீழ்கண்டவாறு இரண்டாம் உரிமை சட்டத்தினை வடிவமைத்திருந்தார். ஆங்கிலத்தில் உள்ள அவரின் உரையை கீழே அளித்துள்ளேன்.
We have come to a clear realization of the fact that true individual freedom cannot exist without economic security and independence. “Necessitous men are not free men.” People who are hungry and out of a job are the stuff of which dictatorships are made.
In our day these economic truths have become accepted as self-evident. We have accepted, so to speak, a second Bill of Rights under which a new basis of security and prosperity can be established for all regardless of station, race, or creed.
Among these are:
The right to a useful and remunerative job in the industries or shops or farms or mines of the Nation;
The right to earn enough to provide adequate food and clothing and recreation;
The right of every farmer to raise and sell his products at a return which will give him and his family a decent living;
The right of every businessman, large and small, to trade in an atmosphere of freedom from unfair competition and domination by monopolies at home or abroad;
The right of every family to a decent home;
The right to adequate medical care and the opportunity to achieve and enjoy good health;
The right to adequate protection from the economic fears of old age, sickness, accident, and unemployment;
The right to a good education.
All of these rights spell security. And after this war is won we must be prepared to move forward, in the implementation of these rights, to new goals of human happiness and well-being.
In our day these economic truths have become accepted as self-evident. We have accepted, so to speak, a second Bill of Rights under which a new basis of security and prosperity can be established for all regardless of station, race, or creed.
Among these are:
The right to a useful and remunerative job in the industries or shops or farms or mines of the Nation;
The right to earn enough to provide adequate food and clothing and recreation;
The right of every farmer to raise and sell his products at a return which will give him and his family a decent living;
The right of every businessman, large and small, to trade in an atmosphere of freedom from unfair competition and domination by monopolies at home or abroad;
The right of every family to a decent home;
The right to adequate medical care and the opportunity to achieve and enjoy good health;
The right to adequate protection from the economic fears of old age, sickness, accident, and unemployment;
The right to a good education.
All of these rights spell security. And after this war is won we must be prepared to move forward, in the implementation of these rights, to new goals of human happiness and well-being.
இந்த உரிமைகள் எல்லாம் கடைகோடி அமெரிக்கனுக்கும் கிடைக்க வேண்டும் என்று ரூஸ்வெல்ட் விரும்பினார். ஆனால் அவர் மறைவுக்கு பிறகு இவை யாராலும் கண்டுகொள்ளப்படவில்லை. இந்த சட்ட வரைவு ஏன் அமல்படுத்தப்படவில்லை, அதன் தற்போதைய இருப்பியல் சிக்கல்கள் என்ன? தொடர்ந்து பார்கலாம்.
இப்பொழுது தமிழில்.. (மொழிபெயர்ப்பில் பிழை இருந்தால் மன்னிக்கவும்).
------------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவின் சாதகமான, நல்ல விடயங்களை பல பதிவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால், இதில் அப்படிப்பட்ட விடயங்கள் இருக்க வாய்ப்பில்லை. நீங்கள் தீவிர அமெரிக்க ஆதரவாளராகவோ, அமெரிக்கராகவோ இருந்தால் இந்த இடுகை உங்களுக்கு பிடிக்காமல் போகலாம்.------------------------------------------------------------------------------------------------------------
நாட்டு மக்கள் அனைவருக்கும் அவர்களின் இனம், மொழி, இருப்பியல் ஆகிய வேறுபாடுகளை கடந்து அனைவரும் வாழ்வில் வளம் பெறவும், பாதுகாக்கப்படவும் இரண்டாம் உரிமை சட்டம் ஒன்றை நாம் ஒன்று கூடி உருவாக்கலாம்.
இவற்றில்,
**நாட்டில் உள்ள தொழிற்சாலைகள், சுரங்கங்கள்,சிறிய/பெரிய கடைகள் அனைத்திலும் பயன் தரத்தக்க, தொடர்ந்து ஊதியமளிக்கக்கூடிய வேலை பெரும் உரிமை.**
தொழிற்சாலைகளும், சுரங்கங்களும் பாகாசுர நிறுவனங்களின் கைகளுக்கு போய்விட்டன. தொடர்ந்து ஊதியமளிக்க இப்பொழுது எந்த நிறுவனமும் முன்வருவதில்லை. இங்கு தொடர் ஊதியம் என்பது தொழிலாளியின் வருடாந்திர அனுபவம் மற்றும் அவரின் அடிப்படை மற்றும் சமூக தேவைகளை நிறைவேற்றும் வண்ணம் இருக்க வேண்டும். ஆனால், வால்மார்ட் போன்ற நிறுவனங்கள், அலுவலகத்தில் வாழும் ஊழியர்களின் உழைப்பை உறிஞ்சிக் கொண்டு முடிந்தவரை ஊதியத்தை குறைக்கின்றன. அங்கு பணிபுரியும் ஊழியருக்கு அந்த வேலை பயன்தரக் கூடியதும் இல்லை. வால்மார்டில் விற்பனை பெண்ணாக இருக்கும் ஒருவர் வேறு எந்த வேலைக்கு போக முடியும்.
*தேவையான அளவு உணவு, உடுத்த உடை மற்றும் பொழுதுபோக்கு இவற்றை பெறும் வண்ணம் முறையான வருமானத்தை பெறும் உரிமை*
ஊதியம் அதிகமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக, அமெரிக்கர்களின் வேலையை பிடுங்கி மூன்றாம் தர நாடுக்களுக்கு கொடுப்பதும், முடிந்த அளவு ஊதியத்தை குறைக்கவும் தயாரக இருக்கும் தரகு முதலாளிகளிடம் இருந்து இந்த உரிமை கிடைப்பது அரிதிலும் அரிது. ஆனால் இவற்றை கடன் அட்டைகள் மூலம் நிறைவேற்றிக் கொள்ளும் நுகர்வு கலாச்சாரத்தை தந்திரமாக பரப்பி விட்டுள்ளனர். எப்படியிருந்தாலும் நிறுவனங்கள் தொடர்ந்து கொழுத்துக் கொண்டிருக்கும், கடன் சுமை அதிகமானால் அரசாங்கம் மக்களின் வரிப் பணத்தில் இருந்து கைத்தூக்கிவிடும் என்ற நம்பிக்கை.
*ஒவ்வொரு விவசாயியும் தனது குடும்பத்திற்கு பாங்குடைய வாழ்வாதரத்தை தனது விளை பொருட்களை வளர்பதன் மூலமும் விற்பனை செய்வதன் மூலமும் பெறும் உரிமை*
மான்சாண்டோ நிறுவனம், விவசாயிகள் விதை நெல்லை சேமிப்பது குற்றம் எனக் கூறி வழக்கு தொடர்கிறது.விதை நெல் என்பது ஒரு உழவனின் சொத்து, தன் நிலத்தில் கடின உழைப்பின் விளைவாக விளைந்ததை எடுக்காதே என கூறுகிறது மான்சாண்டோ. கோழி இறைச்சி வியாபாரம் செய்யும் "டைசன்" நிறுவனம் முதலில் தனது கிளைகளை திறக்க விரும்பும் தொழில் முனைவோருக்கு நைச்சியமாக பேசி பின்னர் அவர்களை ஒரு அடிமை போல் நடத்துகிறது. இவர்களின் கிளையை நாம் ஆரம்பிக்க கட்டும் முன் பணம், கோழிகள் பரமரிப்பு என கடன் சேர்வது தான் மிச்சம். ஆனால் இறைச்சி கோழியை மட்டும் தவறாமல் அள்ளிச் சென்றுவிடுவார்கள். சீக்கு வந்த கோழிகளை அப்புறப்படுத்த கூட முறையான வசதிகள் செய்து தரவில்லை. இதில் எங்கிருந்து ஒரு விவசாயி இந்த உரிமையை பெருவது.
*ஒவ்வொரு தொழில் முனைவோரும், முறையற்ற போட்டியின்றி உளநாட்டிலும் வெளிநாட்டிலும் , முறையான வழியில் ஏகாதிபத்தியம் இல்லாமல் தனது வியாபாரத்தில் தொடர்ந்து ஈடுபடும் உரிமை*
அமெரிக்க நிறுவனங்களின் ஏகாதிபத்தியம் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பல நடுத்தர சில்லரை வணிக கடைகள் வால்மார்ட் வந்த பிறகு காணாமல் போயின. உள்நாட்டில் ம்ட்டும் என்றில்லமல் இந்த ஒண்ட வந்த பிடாரிகள் போகும் இடமெல்லாம் இருக்கும் அந்நாட்டு வியாபரிகளையும் துரத்தியடிக்கின்றன. ரூஸ்வெல்ட் ஒரு தீர்க்கதரிசி, அப்பொழுதே "unfair competition" என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். ஒருவேளை, 1943-ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் ஊழியர்களை துரத்தியடித்த நிகழ்வின் பாதிப்பாக கூட இது இருக்கலாம்.
*எல்லா குடும்பங்களுக்கும் பாங்குடைய நல்ல வீடு பெறும் உரிமை*
சொந்த வீட்டில் இருந்தவர்களை ஆசை காட்டி, அவர்களை மீளா கடன்காரர்களாக மாற்றி கடைசியில் குடியிருந்த வீட்டையும் பறித்துக் கொண்டு நடுத்தெருவில் விட்டுவிட்டன வால்ஸ்ட்ரீட்-ல் இயங்கும் பண்ணாடை நிதி நிறுவனங்கள். அரசாங்கமோ, வீடிழந்தவர்களுக்கு முறையான நிவாரணம் வழங்காமல் நிதி நிறுவனங்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து அள்ளிக் கொடுத்தது.
*முதுமை,உடல்நலம்,விபத்து,வேலையின்மை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை*
உடல்நலம் சார்ந்த விடயங்களுக்கு அமெரிக்காவில் காப்பீடு இருந்தால் தான் சிகிச்சை பெற முடியும், ஒப்பீட்டளவில் பார்த்தால், நம் நாட்டை விட மருத்துவ செலவுகள் மிக அதிகம். ஒபாமா பதவியேற்ற போது அனைவருக்கும் அரசாங்க காப்பீடு வழங்குவதாக அறிவித்தார். ஆனால், காப்பீடு தரும் நிறுவனங்கள் வால்ஸ்ட்ரீட்-ல் இயங்கும் வரை முறையான காப்பீடு பெறுவது சாத்தியமில்லை. வால்மார்ட்-ல் பணிபுரிந்த ஒரு 28 வயது பெண் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிடுகிறார். அவரின் இறப்பை காரணம் காட்டி தனக்கு நட்டம் வருமென்று 10000 அமெரிக்க டாலர்கள் அந்த நிறுவனம், தொழிலாளியின் காப்பீடை பெருகிறது. அதாவது, தொழிலாளி தொடர்ந்து உழைத்தால் தனக்கு இவ்வளவு ஆதாயம் வரும், எனவே காப்பீடு பணம் தனக்கு வர வேண்டும் என்று அடாவடியாக பறிக்கிறது. வழிப்பறியை விட மோசமான செயல் இது. மற்றொன்று ராணுவ சேவை நிறுவனங்கள். இவர்கள், ராணுவ வீரர்களை ஒப்பந்த முறையில் அரசாங்கம் தேவைக்கு ஏற்ப விற்பவர்கள். இவர்களின் காப்பீடு பணத்தை கூட சம்பந்தப்பட்ட நிறுவனம் அவரின் மறைவிற்கு பின் பறித்துவிட்டது. இதில் உச்சம் தனது காப்பீடு உரிமை பத்திரத்தில் "Dead Peasant" என்று குறிப்பிடுகிறது. அதாவது காப்பீடு ஒப்பந்தத்தில் பயனாளர் பெயர் என தன் பெயரை போட்டுக்கொள்வது.
அடுத்தது வேலையின்மை, இதற்கு அவர்கள் கூறும் காரணம், வேலையிழப்பு இல்லை என தெரிந்தால் எந்த தொழிலாளியும் ஒழுங்காக வேலை செய்யமாட்டார்கள். ஆனால் ரூஸ்வெல்ட் சொன்னது, படித்துவிட்டு வேலையின்றி இருக்கும் பட்டதாரிகளுக்கும், உழைக்கும் மக்களுக்கும் வேலையின்மையை நீக்குவது.
*கல்வி பெறும் உரிமை*
இது பள்ளிக் கல்வியளவில் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டாலும், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள் மாணவர்களின் வாழ்க்கையை தொடர்ந்து கேள்விக்குள்ளாக்குகின்றன. ஒரு சிறுவனோ,சிறுமியோ குற்றச்செயல்களில் ஈடுபட்டால், சீர்திருத்தப்பள்ளியில் அதிக காலம் தண்டனை பெறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், இந்த வகையான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கும் சீர்திருத்தப்பள்ளிகளுக்கும் மறைமுக ஒப்பந்தம் உள்ளதே. மாணவர்கள் கடினமாக வேலை வாங்கப்படுவதும், குறைவான ஊதியத்தில் வேலைகள் நடப்பதும் இதற்கு காரணம்.
பட்டப் படிப்பு கல்வி கற்க ஒவ்வொரு சராசரி அமெரிக்க மாணவரும் கல்விக் கடனைத்தான் நம்பியுள்ளனர். உதாரணத்திற்கு விமான ஓட்டுனர் பயிற்சி பெறும் மாணவர்கள் கிட்டத்தட்ட 100,000 டாலர்கள் கடன் வாங்கி தன் படிப்பை முடிக்கின்றனர். ஆனால் கிடைக்கும் ஊதியம் கண்டிப்பாக இவ்வளவு கடனையும் கட்டி முடிக்க போதாது. எனவே அவர்கள் பகுதி நேர வேலைகளுக்கும், உணவிற்கு "Supplemental Nutrition Assistance Program (SNAP)" என்ற திட்டத்தை நம்பியுள்ளனர்.இது கிட்டத்தட்ட நம் நாட்டு பொது வினியோக திட்டம் போன்றது. கல்வி வணிகமயமாக்கப்பட்டதால், இப்போதெல்லம் அங்கு உயர் கல்வி கற்பவர் விகிதம் தொடர்ந்து குறைகிறது. எனவே நம் நாட்டில் இருந்து அறிவு இறக்குமதி அதிகரித்த வண்ணம் உள்ளது.
*மேற்குறிப்பிட்ட அனைத்தும் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளது. அது நாட்டு மக்களின், பாதுகாப்பு. இச்சட்டம் அடிப்படை வசதி, கவுரவமான வாழ்வு, உணவு மற்றும் சீரான உடல் நலத்துடன் கூடிய பாதுகாப்பை வலியுறுத்துவதாகும்*
இரண்டாம் உலகப்போரில் வென்ற அமெரிக்க இவற்றை பெறவில்லை. மாறாக, வீழ்த்தப்பட்ட ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் , கல்வி, விவசாயத்தில் முன்னேற்றம், முதியோர் ஓய்வூதியம், ஊதியத்துடன் கூடிய விடுமுறை(Paid Vacation) இவை ஒவ்வொன்றையும் பெற்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் இப்போது ஜெர்மனி ஒரு முக்கிய பொருளாதார சக்தியாக உள்ளது. இரண்டு அணுகுண்டுகளை வாங்கிய போதும், ஜப்பான், முன்னனி ஏற்றுமதியாளராக உயர்ந்தது. இவையெல்லாம் எப்படி சாத்தியமாயிற்று?. போர் முடிந்ததும் ரூஸ்வெல்ட் நிர்வாகத்திலிருந்த அதிகாரிகள், போரில் தோற்ற நாடுகளை மறு உருவாக்கம் செய்வதற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அமெரிக்கவோ போரில் மட்டுமே வென்றது.
இந்த உரிமைகள் எல்லாம் எப்பொழுது அமெரிக்கர்கள் பெறுவார்கள்?. கிட்டத்தட்ட தற்போதைய சூழ்நிலையில் இது சாத்தியம் இல்லாதது போல் தோன்றுகிறது.
அப்படியே புகழ்பெற்ற அமெரிக்க ஆவணப்பட இயக்குனர் மைக்கேல் மூர் அவர்களின் "Capitalism: A Love Story" படத்தையும் ஒரு முறை பார்த்துவிடுங்ள். இந்த இடுகையின் பல தகவல்கள் இப்படத்தின் மூலமாக திரட்டியவையே.
Saturday, 7 June 2014
எந்த வேலைகளை செய்ய இந்தியர்கள் அதிகமாக கூகிள் பயன்படுத்துகிறார்கள்!!
வணக்கம்!
ஏதாவது வேலை செய்யும் போது , பாதியில் மாட்டிக் கொண்டால் இப்போது உடனே கேட்பது திருவாளர் கூகிளைத் தான். கீழே பல நாட்டவர்கள் எந்த வேலைகளை கூகிள் துணையுடன் செய்கிறார்கள் என்று படம் எடுத்து போட்டுள்ளேன்.
படத்தில் உள்ள சில சொற்கள் , சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கலாம்... "discretion is advised"
Labels:
நகைச்சுவை
,
பொழுதுபோக்கு
Sunday, 25 May 2014
இந்துக்களை விரட்டிய முஸ்லிம்களும், ஆக்கிரமிக்கப்பட்ட சென்னையும்.
"மலை,ஏரி,காடு,ஆறு,கடற்கரை,முகத்துவாரம் என பலவகை புவிபகுதியையும் உள்ளடக்கிய மிகச் சில நகரங்களுள் சென்னையும் ஒன்று.மலை, வெடி வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தகர்கப்படுகிறது.ஏரிகள் குடியிருப்புகளுக்காக நிரப்பப்பட்டு மறைந்துவிட்டன.காடோ ... குருகி ,சிறுத்து சுற்று மதில்களால் கிண்டியில் காப்பற்றப்படுகிறது.முகத்துவாரத்தின் ஒரு சிறிய பகுதி மட்டும் எஞ்சியிருக்கிறது அடையாறில்.
Labels:
அரசியல்
,
இசுலாம்
,
சமூகம்
,
சுற்றுச்சூழல்
Sunday, 13 April 2014
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அல்வா கொடுத்த சூரிய கிரகணம்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானி. பெயரை சொன்னதும் உடனே E=MC2-ஐ நினைக்காதீர்கள். அதற்கும் மேல் பலவற்றை கண்டுபிடித்துள்ளார். அணுகுண்டு போட்டதினால் ஐன்ஸ்டீன் என்றாலே அந்த சமன்பாடு நியாபகம் வருகிறது.....
இவர் தனது சார்பியல் கோட்பாடுகளை நிரூபிக்க முயன்ற போது, அவருக்கு சூரிய கிரகணங்கள் தேவைப்பட்டது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவரால் அதை சரிவர நிரூபிக்க முடியவில்லை. சூரியன் அவருக்கு அல்வா கொடுத்த வண்ணம் இருந்தது, ஆனால் தான் ஆராய்ச்சியை தொடங்கி கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து, அவருக்கு அனைத்தும் பிடிபட்டது.
பல வருடங்கள் வேலை கிடைக்காததால் சுவிட்சர்லாந்து காப்புரிமை அலுவலகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்தார்.காப்புரிமை அலுவலகத்தில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பணி ஆராய்சியாளர்களால் கொடுக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை தொகுத்து, அவற்றை வகைப்படுத்தி வைப்பது.இதில் பலதரப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை அவரால் வாசிக்க முடிந்தது.இப்படி வாசித்த பின் பிரபஞ்சத்தை பற்றிய பல சிந்தனைகள் அவருக்குள் எழுந்தன.இந்த வாசிப்பு அனுபவம், 1905-ல் அவர் நான்கு ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட உதவியது. அதில் முக்கியமானது "ஒளி"யை பற்றிய "Photo Electric Effect". இதுவரை அலையாக பார்த்த ஒளியை அவர் துகள்களாக பார்த்தார். போடான் என்ற துகள்களால் ஒளி கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார். மற்றொரு கட்டுரையில் அணுவின் இருப்பை பற்றிய கணிப்புகளைத் தெரிவித்திருந்தார்.(அக்காலத்தில் அணுவைப் பற்றி ஆய்வுகள் இல்லை, பிறகு தான் எலக்ட்ரான், ப்ரொடான் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன). பின் அனைவருக்கு நன்கு அறிமுகமான E=MC2 , இறுதியாக சிறப்பு சார்பியல் கொள்கை. இதின்படி காலமும் வெளியும் வெவ்வேறு இல்லை, இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்த காலவெளி, நீங்கள் இருக்கும் வெளி சுருங்கினால் காலமும் சுருக்கிவிடும், உதாரணம், வார்ம் ஹோல்(Worm Hole). இவை வெளியை வளைத்து நமக்கு காலத்தை சுருக்கக்கூடியவை. Worm Hole பற்றி சமுத்ரா அணு அண்டம் அறிவியலிலும், சார்வாகனும் பல எளிமையான பதிவுகளை எழுதியுள்ளனர். விளக்கம் தேவைப்படுவோர், அவர்கள் தளங்களை பார்க்கவும்.
சிறப்பு சார்பியல் கொள்கையை முடித்தபின் அவருக்கு அதில் எதோ தப்பு உள்ளது போல் தோன்றியது. அதை மறு ஆய்வு செய்த போது, அதன் சமன்பாடுகள் சீரான வேகத்தில் செல்லும் போது மட்டுமே சரியான தரவுகளை கொடுத்தன. ஆனால் பிரபஞ்சத்தில் எல்லாமே முடுக்கம்(acceleration) பெருபவை. உடனே தனது சிறப்பு சார்பியல் கொள்கைகளை மறுஆய்வு செய்து பொது சார்பியல் கொள்கைகளாக மாற்றினார். இந்த முறை அவர் எடுத்துக்கொண்டது ஈர்ப்பு விசையை!. ஐசக் நியூட்டன் இழுவிசையால் ஆப்பிள் மரத்தின் மேலிருந்து விழுவதாக கூறினார், ஆனால் நினைத்து பாருங்கள் மரத்தின் மேலிருந்து ஒரு ஆப்பிள் விழவேண்டுமானால் அதனை ஏதேனும் ஒன்று தள்ள வேண்டும், அப்படி தள்ளுவது எது?. இந்த கேள்வி தான் ஐன்ஸ்டீன் மனதில் முளைத்தது.
இப்பொழுது ஒரு சிறிய உதாரணம். சூரியனை பூமி சுற்றி வருவதாக தான் இதுவரை சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஏன் பூமி சூரியனை சுற்ற வேண்டும்?. உண்மையில் பூமி ஒரு நேர்கோட்டில் தான் பயணம் செய்ய முயல்கிறது ஆனால் சூரியன் அதன் பாதையை(வெளியை) வளைத்துவிடுவதால் பூமி ஒரு நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்ற ஆரம்பிக்கிறது.
படத்தில் ஒரு எளிமையான உதாரணம். படத்தில் உள்ள நீல நிற துணி தான் வெளி என்று வைத்துக்கொள்வோம். மத்தியில் உள்ள பெரிய இரும்புத்துண்டு தான் சூரியன். சூரியனின் நிறை வெளியை வளைக்கிறது. இப்பொழுது ஒரு சிறிய இருப்புத்துண்டு முதலில் நேர்கோட்டில் தான் தன் பயணத்தை தொடங்குகிறது.புற விசையின் பாதிப்பு ஏதும் இல்லையெனில் அது நேர்கோட்டில் தன் பயணத்தை தொடரும், ஆனால் சூரியன் அதன் வெளியை வளைத்துவிடுவதால், நீள்வட்ட பாதையில் பூமி சூரியனை சுற்றுகிறது. காற்று மற்றும் துணியின் உராய்வால், அந்த சிறிய இரும்பு தன் வேகத்தை இழக்கிறது. அண்டவெளியில் அப்படிப்பட்ட உராய்வின்மையால் , பூமி தொடர்ந்து சுற்றிவருகிறது.எனவே காலவெளி என்பது வளைக்ககூடியது.
இதே போல் தான் பூமியும் தன்னை சுற்றியுள்ள வெளியை வளைக்கிறது, எனவே வளைந்த வெளி பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளின் மேலும் தள்ளுவதால் நாம் ஈர்ப்புவிசையை உணர்கிறோம். இதை அவர் வெளியிட்ட போது பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. காலம்காலமாக ஈர்ப்புவிசையை மக்கள் பார்த்த விதத்தை ஐன்ஸ்டீனின் கூற்றுகள் அடியோடு மாற்றின. எனவே பலருக்கும் அதில் மாற்றுக்கருத்து இருந்தது. தனது கோட்பாடுகளை நிரூபிக்க பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சிறிய வழி புலப்பட்டது. கிட்டத்தட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளில் வருவது போன்ற ஒரு பரிசோதனை அது.
சூரியன் வெளியை வளைக்கிறது, எனவே அதன் வளைந்த வெளியினூடாக போகும் எந்த பொருளும் வளைந்து தான் செல்ல வேண்டும். நேராக செல்லும் ஒரு பொருளை சூரியனின் ஓரத்தில் பயணிக்க வைத்தால் அதன் பாதையை சூரியன் வளைக்கும் எனவே, சூரியனை கடக்கும்போது அதன் பாதை சற்று வளைந்து இருந்தால் தனது கோட்பாடுகளை நிரூபித்துவிடலாம் என்றார்.
ஆனால் எதை வைத்து இந்த பரிசோதனையை செய்வது?. ஒளியை வைத்து செய்யாலாமே... சூரியனின் பின்னால் இருந்து ஒளிக்கற்றை ஒன்றை செலுத்தினால் அது சூரியனை கடக்கும் போது நேராக இல்லாமல் வளைந்து பயணிக்கும், அப்படி வளைந்து பயணித்தால் சூரியன் அதை சுற்றியுள்ள வெளியை வளைப்பதால் தான் ஈர்ப்பு உண்டாகிறது என்பதை காணலாம், ஏனெனில் ஒளிக்கற்றை நேர்கோட்டில் தான் பயணம் செய்யும். இதை எப்படி செய்யலாம், அவ்வளவு பெரிய ஒளிக்கற்றையை உருவாக்கும் ஒரு விளக்கும், அதன் வளைந்த பாதையை கணிக்கும் கருவிகளுக்கும் எங்கு போவது?. இதற்கு இயற்கை ஒரு நல்ல தீர்வை அளித்தது. நட்சதிரங்களில் இருந்து வரும் ஒளி சூரியனால் வளைக்கப்பட்டும், எனவே சாதாரணமாக ஒரு நட்சத்திரத்தை பார்ப்பதை காட்டிலும், சூரியனின் பின்புறம் இருந்து ஒளிரும் நட்சத்திரத்தை பார்க்கும் போது அதன் ஒளி சற்று விலகி தெரியும்.இது தான் அவர் செய்ய நினைத்த பரிசோதனை..
சூரிய ஒளியில் நட்சத்திரங்கள் தெரியாது, ஆனால் சூரியனின் பின்னால் இருந்து வரும் நட்சத்திரங்களின் ஒளி வளைக்கப்படுவதை பார்க்கலாம். எப்படி?. ஒரு முழு சூரிய கிரகணம் ஏற்படும்பொழுது, சூரிய ஒளி மறைக்கப்பட்டு அதன் பின்னனியில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தும் தெரியும். எனவே ஐன்ஸ்டீனின் கோட்பாடுப்படி அவற்றின் ஒளி சாதாரண இடத்தை காட்டிலும் சற்று விலகி தெரிய வேண்டும். யாரேனும் ஒருவர் இதை படம் பிடித்து காண்பிப்பது வரை இதை நிரூபிக்க முடியாது. எனவே ஐன்ஸ்டீன் பல நாடுகளில் உள்ள ஆய்வு மையத்தின் தொலைநோக்கி ஆய்வாளர்களுக்கு எழுதினார். அப்பொழுது ஒரு ஆய்வு மையத்தின் உதவியாளரான இர்வின் பின்லே ஃப்ரெண்ட்லிச் ஐன்ஸ்டீனுடன் தொடர்பு கொண்டார். ஃப்ரெண்ட்லிச் புதிதாக திருமணமான தன் மனைவியுடன் சுவிட்சர்லாந்து செல்கையில் ஐன்ஸ்டீனிடம் இருந்து அழைப்பு வந்தது. ஃப்ரெண்ட்லிச் உடனே சூரிஸ் சென்றார். ஐஸ்டீனுடன் பலமணி நேரம் உரையாடிவிட்டு பின்னர் அடுத்த முழு சூரிய கிரகணம் 21-ஆகஸ்டு 1914 அன்று ரஷ்யாவின் கிரிமியா பகுதியில் தெரியவிருப்பதையும் அதை படம் எடுத்து தருவதாகவும் கூறினார் [அப்போது கிரிமியா ரஷ்யாவின் பகுதி; இப்பொழுது 2014-ல் மீண்டும் :)]
உடனே ஃப்ரெண்ட்லிச் அமெரிக்கவில் உள்ள லிக் ஆய்வு மையத்திற்க்கு ஒரு கடிதம் எழுதினார். அங்கு வில்லியம் வாலசு காம்பெல், கிரகணங்களை படம் எடுப்பதில் திறமை மிக்கவர்.கடிதத்தை பார்த்த அவர் உற்சாகமடைந்து புகைப்படங்களை தானும் எடுக்கப்போவதாக கூறி கிரிமியா சென்றார். ஃப்ரெண்ட்லிச் தனது இரு உதவியாளர்களுடன் சூரிய கிரகணத்தை படம் பிடிக்க கிளம்பினார்.அது முதல் உலகப்போர் காலகட்டம், ஃப்ரெண்ட்லிச் ஒரு ஜெர்மானியர் எனவே ரஷ்யா ராணுவத்தினர் அவரை உளவாளி என நினைத்து போர்க் கைதியாக பிடித்து சென்றனர். காம்பெல் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆகையால் அவரி படம் பிடிக்க அனுமதித்தனர், அமெரிக்க அப்பொழுது போரில் பங்கு பெறவில்லை.துரதிர்ஷ்டவசமாக காம்பெல் படம் எடுக்கையில் மேகங்கள் சூழ்ந்து கொண்டதால் அவரால் படங்களை சரிவர எடுக்க முடியவில்லை.
ஐன்ஸ்டீன் தொடர்ந்து தனது கணக்குகளில் கவனம் செலுத்தினார். அப்பொழுது அதில் இருந்த தவறுகளை சரி செய்தபோது , தன் பொது சார்பியல் கொள்கையை ஆய்வுகளில் முன்னேற்றம் காண்பது தெரிந்தது. அப்போது ப்ரஷ்யாவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் உரையாற்ற அழைப்பு வந்தது. அங்கு டேவிட் ஹில்பர்ட் ஐன்ஸ்டீனின் உரையை கேட்க வந்திருந்தார், இவர் ஒரு தலைசிறந்த கணித மேதை. ஐன்ஸ்டீனின் உரையை கேட்டபின் அவரின் கணிதத்தில் உள்ள தவறுகள் ஹில்பர்ட்ற்கு புரிந்தது ,அந்த கணக்குகளை ஹில்பர்ட் மறு ஆய்வு செய்தார்.
ஐன்ஸ்டீன், அப்பொழுது புதன் கிரகம் சூரியனை சுற்றும் பாதை எப்பொழுதும் ஒரே இடமாக இல்லாமல் இருப்பதையும், அது நியூட்டனின் இயக்க விதிகளை மதிக்காமல் ,அந்த பாதை பல நீள்வட்டங்கள் இணைந்த ஒரு சுற்றாக இருப்பதை வைத்து தனது கணக்குகளை போட்டு பார்த்தார். தனது பொது சார்பியல் கோட்பாடு புதன் கிரகத்தின் இந்த சுற்றுப் பாதை மர்மத்தை முழுமையாக விளக்கியது.
இப்பொழுது மறுபடியும் ஒரு சூரிய கிரகணம் ஜூன் 18- 1918-ல் வாஷிங்க்டனில்; காம்பெல் எப்படியாவது படம் பிடிக்க வேண்டும் என கலிபோர்னியாவில் இருந்து வாஷிங்டன் வந்தார். இந்த முறையும் மேகங்கள் சூழ்ந்து ஏமாற்றியது போல் இருந்தது, ஆனால் சரியாக நிலா சூரியனை மறைக்கும் வேளையில் மேகங்கள் விலக, காம்பெல் படம் எடுத்தார். சாதாரண இரவில் அதே கோணத்தில் எடுக்கப்பட்ட படங்களின் மேல் இந்த படங்களை வைத்து நட்சத்திரங்களின் இருப்பை கணித முறையில் கணித்தனர். ஆனால் அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. பின்னர் மற்றொருவர், ஆப்ரிக்காவில் இருந்து ஒரு முழு சூரிய கிரகண படம் எடுத்து வந்தார், அதில் தெளிவின்மையால் ஆய்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. திரும்பவும் ஐன்ஸ்டீனுக்கு அல்வா கொடுத்தது சூரிய கிரகணம்
இறுதியாக, 1922 செப்டம்பரில் ஆஸ்திரேலியாவின் மேற்கு கரையில் ஒரு முழு சூரிய கிரகணம் வருவதையறிந்தது, காம்பெல் தனது கருவிகளுடன் ஆஸ்திரேலியா சென்றார். காம்பில் மட்டுமல்லாமல் ஏழு வெவ்வேறு ஆய்வு குழுக்கள் இந்த ஆய்வுக்காக ஆஸ்திரேலியா வந்தது.ஒரு பிரிடிஷ் குழு மற்றும் ஃப்ரெண்ட்லிச் குழுவினருக்கு மேக மூட்டத்தினால் படம் எடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய குழுவும், இந்திய குழுவும் கருவிகள் சரிவர இயங்காததால் அவர்களும் பிந்தங்கிவிட்டனர்.காம்பெல் குழுவிற்கு அற்புதமான படங்கள் கிடைதன. கிட்டத்தட்ட 92 நட்சத்திரங்கள் சூரியனின் மங்கிய ஒளியில் தெரிந்தன. அவற்றை ஆய்வு செய்தபோது நட்சத்திரங்களின் ஒளி ஐன்ஸ்டீன் கூறியது போலவே விலகியிருந்தது. ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கொள்கை நிரூபிக்கப்பட்டது.காம்பெல் தனது படங்களி முதலில் ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி வைத்தார். பதினைந்து வருடங்களுக்கு பிறகு ஈர்ப்பு விசையின் பரிமாணத்தையே மாற்றியமைத்தார், ஈர்ப்பு விசை மட்டுமல்ல பிரபஞ்சம் இயங்கும் முறையும் இதன் மூலம் மாறியது. பலவருடங்களாக நோபல் பரிசை மறுத்து வந்த நோபல் கமிட்டி அவருக்கு ஒளிமின்விளைவு ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கி கவுரவித்தது.
இவர் தனது சார்பியல் கோட்பாடுகளை நிரூபிக்க முயன்ற போது, அவருக்கு சூரிய கிரகணங்கள் தேவைப்பட்டது, ஆனால் ஒவ்வொரு முறையும் அவரால் அதை சரிவர நிரூபிக்க முடியவில்லை. சூரியன் அவருக்கு அல்வா கொடுத்த வண்ணம் இருந்தது, ஆனால் தான் ஆராய்ச்சியை தொடங்கி கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து, அவருக்கு அனைத்தும் பிடிபட்டது.
பல வருடங்கள் வேலை கிடைக்காததால் சுவிட்சர்லாந்து காப்புரிமை அலுவலகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்தார்.காப்புரிமை அலுவலகத்தில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த பணி ஆராய்சியாளர்களால் கொடுக்கப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை தொகுத்து, அவற்றை வகைப்படுத்தி வைப்பது.இதில் பலதரப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை அவரால் வாசிக்க முடிந்தது.இப்படி வாசித்த பின் பிரபஞ்சத்தை பற்றிய பல சிந்தனைகள் அவருக்குள் எழுந்தன.இந்த வாசிப்பு அனுபவம், 1905-ல் அவர் நான்கு ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட உதவியது. அதில் முக்கியமானது "ஒளி"யை பற்றிய "Photo Electric Effect". இதுவரை அலையாக பார்த்த ஒளியை அவர் துகள்களாக பார்த்தார். போடான் என்ற துகள்களால் ஒளி கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார். மற்றொரு கட்டுரையில் அணுவின் இருப்பை பற்றிய கணிப்புகளைத் தெரிவித்திருந்தார்.(அக்காலத்தில் அணுவைப் பற்றி ஆய்வுகள் இல்லை, பிறகு தான் எலக்ட்ரான், ப்ரொடான் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன). பின் அனைவருக்கு நன்கு அறிமுகமான E=MC2 , இறுதியாக சிறப்பு சார்பியல் கொள்கை. இதின்படி காலமும் வெளியும் வெவ்வேறு இல்லை, இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்த காலவெளி, நீங்கள் இருக்கும் வெளி சுருங்கினால் காலமும் சுருக்கிவிடும், உதாரணம், வார்ம் ஹோல்(Worm Hole). இவை வெளியை வளைத்து நமக்கு காலத்தை சுருக்கக்கூடியவை. Worm Hole பற்றி சமுத்ரா அணு அண்டம் அறிவியலிலும், சார்வாகனும் பல எளிமையான பதிவுகளை எழுதியுள்ளனர். விளக்கம் தேவைப்படுவோர், அவர்கள் தளங்களை பார்க்கவும்.
சிறப்பு சார்பியல் கொள்கையை முடித்தபின் அவருக்கு அதில் எதோ தப்பு உள்ளது போல் தோன்றியது. அதை மறு ஆய்வு செய்த போது, அதன் சமன்பாடுகள் சீரான வேகத்தில் செல்லும் போது மட்டுமே சரியான தரவுகளை கொடுத்தன. ஆனால் பிரபஞ்சத்தில் எல்லாமே முடுக்கம்(acceleration) பெருபவை. உடனே தனது சிறப்பு சார்பியல் கொள்கைகளை மறுஆய்வு செய்து பொது சார்பியல் கொள்கைகளாக மாற்றினார். இந்த முறை அவர் எடுத்துக்கொண்டது ஈர்ப்பு விசையை!. ஐசக் நியூட்டன் இழுவிசையால் ஆப்பிள் மரத்தின் மேலிருந்து விழுவதாக கூறினார், ஆனால் நினைத்து பாருங்கள் மரத்தின் மேலிருந்து ஒரு ஆப்பிள் விழவேண்டுமானால் அதனை ஏதேனும் ஒன்று தள்ள வேண்டும், அப்படி தள்ளுவது எது?. இந்த கேள்வி தான் ஐன்ஸ்டீன் மனதில் முளைத்தது.
இப்பொழுது ஒரு சிறிய உதாரணம். சூரியனை பூமி சுற்றி வருவதாக தான் இதுவரை சொல்லப்பட்டுள்ளது. ஆனால் ஏன் பூமி சூரியனை சுற்ற வேண்டும்?. உண்மையில் பூமி ஒரு நேர்கோட்டில் தான் பயணம் செய்ய முயல்கிறது ஆனால் சூரியன் அதன் பாதையை(வெளியை) வளைத்துவிடுவதால் பூமி ஒரு நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்ற ஆரம்பிக்கிறது.
படத்தில் ஒரு எளிமையான உதாரணம். படத்தில் உள்ள நீல நிற துணி தான் வெளி என்று வைத்துக்கொள்வோம். மத்தியில் உள்ள பெரிய இரும்புத்துண்டு தான் சூரியன். சூரியனின் நிறை வெளியை வளைக்கிறது. இப்பொழுது ஒரு சிறிய இருப்புத்துண்டு முதலில் நேர்கோட்டில் தான் தன் பயணத்தை தொடங்குகிறது.புற விசையின் பாதிப்பு ஏதும் இல்லையெனில் அது நேர்கோட்டில் தன் பயணத்தை தொடரும், ஆனால் சூரியன் அதன் வெளியை வளைத்துவிடுவதால், நீள்வட்ட பாதையில் பூமி சூரியனை சுற்றுகிறது. காற்று மற்றும் துணியின் உராய்வால், அந்த சிறிய இரும்பு தன் வேகத்தை இழக்கிறது. அண்டவெளியில் அப்படிப்பட்ட உராய்வின்மையால் , பூமி தொடர்ந்து சுற்றிவருகிறது.எனவே காலவெளி என்பது வளைக்ககூடியது.
இதே போல் தான் பூமியும் தன்னை சுற்றியுள்ள வெளியை வளைக்கிறது, எனவே வளைந்த வெளி பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளின் மேலும் தள்ளுவதால் நாம் ஈர்ப்புவிசையை உணர்கிறோம். இதை அவர் வெளியிட்ட போது பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. காலம்காலமாக ஈர்ப்புவிசையை மக்கள் பார்த்த விதத்தை ஐன்ஸ்டீனின் கூற்றுகள் அடியோடு மாற்றின. எனவே பலருக்கும் அதில் மாற்றுக்கருத்து இருந்தது. தனது கோட்பாடுகளை நிரூபிக்க பலவாறாக சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சிறிய வழி புலப்பட்டது. கிட்டத்தட்ட சயின்ஸ் ஃபிக்ஷன் கதைகளில் வருவது போன்ற ஒரு பரிசோதனை அது.
சூரியன் வெளியை வளைக்கிறது, எனவே அதன் வளைந்த வெளியினூடாக போகும் எந்த பொருளும் வளைந்து தான் செல்ல வேண்டும். நேராக செல்லும் ஒரு பொருளை சூரியனின் ஓரத்தில் பயணிக்க வைத்தால் அதன் பாதையை சூரியன் வளைக்கும் எனவே, சூரியனை கடக்கும்போது அதன் பாதை சற்று வளைந்து இருந்தால் தனது கோட்பாடுகளை நிரூபித்துவிடலாம் என்றார்.
ஆனால் எதை வைத்து இந்த பரிசோதனையை செய்வது?. ஒளியை வைத்து செய்யாலாமே... சூரியனின் பின்னால் இருந்து ஒளிக்கற்றை ஒன்றை செலுத்தினால் அது சூரியனை கடக்கும் போது நேராக இல்லாமல் வளைந்து பயணிக்கும், அப்படி வளைந்து பயணித்தால் சூரியன் அதை சுற்றியுள்ள வெளியை வளைப்பதால் தான் ஈர்ப்பு உண்டாகிறது என்பதை காணலாம், ஏனெனில் ஒளிக்கற்றை நேர்கோட்டில் தான் பயணம் செய்யும். இதை எப்படி செய்யலாம், அவ்வளவு பெரிய ஒளிக்கற்றையை உருவாக்கும் ஒரு விளக்கும், அதன் வளைந்த பாதையை கணிக்கும் கருவிகளுக்கும் எங்கு போவது?. இதற்கு இயற்கை ஒரு நல்ல தீர்வை அளித்தது. நட்சதிரங்களில் இருந்து வரும் ஒளி சூரியனால் வளைக்கப்பட்டும், எனவே சாதாரணமாக ஒரு நட்சத்திரத்தை பார்ப்பதை காட்டிலும், சூரியனின் பின்புறம் இருந்து ஒளிரும் நட்சத்திரத்தை பார்க்கும் போது அதன் ஒளி சற்று விலகி தெரியும்.இது தான் அவர் செய்ய நினைத்த பரிசோதனை..
சூரிய ஒளியில் நட்சத்திரங்கள் தெரியாது, ஆனால் சூரியனின் பின்னால் இருந்து வரும் நட்சத்திரங்களின் ஒளி வளைக்கப்படுவதை பார்க்கலாம். எப்படி?. ஒரு முழு சூரிய கிரகணம் ஏற்படும்பொழுது, சூரிய ஒளி மறைக்கப்பட்டு அதன் பின்னனியில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தும் தெரியும். எனவே ஐன்ஸ்டீனின் கோட்பாடுப்படி அவற்றின் ஒளி சாதாரண இடத்தை காட்டிலும் சற்று விலகி தெரிய வேண்டும். யாரேனும் ஒருவர் இதை படம் பிடித்து காண்பிப்பது வரை இதை நிரூபிக்க முடியாது. எனவே ஐன்ஸ்டீன் பல நாடுகளில் உள்ள ஆய்வு மையத்தின் தொலைநோக்கி ஆய்வாளர்களுக்கு எழுதினார். அப்பொழுது ஒரு ஆய்வு மையத்தின் உதவியாளரான இர்வின் பின்லே ஃப்ரெண்ட்லிச் ஐன்ஸ்டீனுடன் தொடர்பு கொண்டார். ஃப்ரெண்ட்லிச் புதிதாக திருமணமான தன் மனைவியுடன் சுவிட்சர்லாந்து செல்கையில் ஐன்ஸ்டீனிடம் இருந்து அழைப்பு வந்தது. ஃப்ரெண்ட்லிச் உடனே சூரிஸ் சென்றார். ஐஸ்டீனுடன் பலமணி நேரம் உரையாடிவிட்டு பின்னர் அடுத்த முழு சூரிய கிரகணம் 21-ஆகஸ்டு 1914 அன்று ரஷ்யாவின் கிரிமியா பகுதியில் தெரியவிருப்பதையும் அதை படம் எடுத்து தருவதாகவும் கூறினார் [அப்போது கிரிமியா ரஷ்யாவின் பகுதி; இப்பொழுது 2014-ல் மீண்டும் :)]
உடனே ஃப்ரெண்ட்லிச் அமெரிக்கவில் உள்ள லிக் ஆய்வு மையத்திற்க்கு ஒரு கடிதம் எழுதினார். அங்கு வில்லியம் வாலசு காம்பெல், கிரகணங்களை படம் எடுப்பதில் திறமை மிக்கவர்.கடிதத்தை பார்த்த அவர் உற்சாகமடைந்து புகைப்படங்களை தானும் எடுக்கப்போவதாக கூறி கிரிமியா சென்றார். ஃப்ரெண்ட்லிச் தனது இரு உதவியாளர்களுடன் சூரிய கிரகணத்தை படம் பிடிக்க கிளம்பினார்.அது முதல் உலகப்போர் காலகட்டம், ஃப்ரெண்ட்லிச் ஒரு ஜெர்மானியர் எனவே ரஷ்யா ராணுவத்தினர் அவரை உளவாளி என நினைத்து போர்க் கைதியாக பிடித்து சென்றனர். காம்பெல் அமெரிக்காவை சேர்ந்தவர் ஆகையால் அவரி படம் பிடிக்க அனுமதித்தனர், அமெரிக்க அப்பொழுது போரில் பங்கு பெறவில்லை.துரதிர்ஷ்டவசமாக காம்பெல் படம் எடுக்கையில் மேகங்கள் சூழ்ந்து கொண்டதால் அவரால் படங்களை சரிவர எடுக்க முடியவில்லை.
ஐன்ஸ்டீன் தொடர்ந்து தனது கணக்குகளில் கவனம் செலுத்தினார். அப்பொழுது அதில் இருந்த தவறுகளை சரி செய்தபோது , தன் பொது சார்பியல் கொள்கையை ஆய்வுகளில் முன்னேற்றம் காண்பது தெரிந்தது. அப்போது ப்ரஷ்யாவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் உரையாற்ற அழைப்பு வந்தது. அங்கு டேவிட் ஹில்பர்ட் ஐன்ஸ்டீனின் உரையை கேட்க வந்திருந்தார், இவர் ஒரு தலைசிறந்த கணித மேதை. ஐன்ஸ்டீனின் உரையை கேட்டபின் அவரின் கணிதத்தில் உள்ள தவறுகள் ஹில்பர்ட்ற்கு புரிந்தது ,அந்த கணக்குகளை ஹில்பர்ட் மறு ஆய்வு செய்தார்.
ஐன்ஸ்டீன், அப்பொழுது புதன் கிரகம் சூரியனை சுற்றும் பாதை எப்பொழுதும் ஒரே இடமாக இல்லாமல் இருப்பதையும், அது நியூட்டனின் இயக்க விதிகளை மதிக்காமல் ,அந்த பாதை பல நீள்வட்டங்கள் இணைந்த ஒரு சுற்றாக இருப்பதை வைத்து தனது கணக்குகளை போட்டு பார்த்தார். தனது பொது சார்பியல் கோட்பாடு புதன் கிரகத்தின் இந்த சுற்றுப் பாதை மர்மத்தை முழுமையாக விளக்கியது.
இப்பொழுது மறுபடியும் ஒரு சூரிய கிரகணம் ஜூன் 18- 1918-ல் வாஷிங்க்டனில்; காம்பெல் எப்படியாவது படம் பிடிக்க வேண்டும் என கலிபோர்னியாவில் இருந்து வாஷிங்டன் வந்தார். இந்த முறையும் மேகங்கள் சூழ்ந்து ஏமாற்றியது போல் இருந்தது, ஆனால் சரியாக நிலா சூரியனை மறைக்கும் வேளையில் மேகங்கள் விலக, காம்பெல் படம் எடுத்தார். சாதாரண இரவில் அதே கோணத்தில் எடுக்கப்பட்ட படங்களின் மேல் இந்த படங்களை வைத்து நட்சத்திரங்களின் இருப்பை கணித முறையில் கணித்தனர். ஆனால் அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. பின்னர் மற்றொருவர், ஆப்ரிக்காவில் இருந்து ஒரு முழு சூரிய கிரகண படம் எடுத்து வந்தார், அதில் தெளிவின்மையால் ஆய்வு முடிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. திரும்பவும் ஐன்ஸ்டீனுக்கு அல்வா கொடுத்தது சூரிய கிரகணம்
இறுதியாக, 1922 செப்டம்பரில் ஆஸ்திரேலியாவின் மேற்கு கரையில் ஒரு முழு சூரிய கிரகணம் வருவதையறிந்தது, காம்பெல் தனது கருவிகளுடன் ஆஸ்திரேலியா சென்றார். காம்பில் மட்டுமல்லாமல் ஏழு வெவ்வேறு ஆய்வு குழுக்கள் இந்த ஆய்வுக்காக ஆஸ்திரேலியா வந்தது.ஒரு பிரிடிஷ் குழு மற்றும் ஃப்ரெண்ட்லிச் குழுவினருக்கு மேக மூட்டத்தினால் படம் எடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய குழுவும், இந்திய குழுவும் கருவிகள் சரிவர இயங்காததால் அவர்களும் பிந்தங்கிவிட்டனர்.காம்பெல் குழுவிற்கு அற்புதமான படங்கள் கிடைதன. கிட்டத்தட்ட 92 நட்சத்திரங்கள் சூரியனின் மங்கிய ஒளியில் தெரிந்தன. அவற்றை ஆய்வு செய்தபோது நட்சத்திரங்களின் ஒளி ஐன்ஸ்டீன் கூறியது போலவே விலகியிருந்தது. ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கொள்கை நிரூபிக்கப்பட்டது.காம்பெல் தனது படங்களி முதலில் ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி வைத்தார். பதினைந்து வருடங்களுக்கு பிறகு ஈர்ப்பு விசையின் பரிமாணத்தையே மாற்றியமைத்தார், ஈர்ப்பு விசை மட்டுமல்ல பிரபஞ்சம் இயங்கும் முறையும் இதன் மூலம் மாறியது. பலவருடங்களாக நோபல் பரிசை மறுத்து வந்த நோபல் கமிட்டி அவருக்கு ஒளிமின்விளைவு ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கி கவுரவித்தது.
Labels:
அறிவியல்
,
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
,
விண்வெளி ஆராய்ச்சி
Wednesday, 26 March 2014
அரசியல்வாதிகள் பற்றி தலைவர் கவுண்டமணியின் நக்கல்!
தலைவர் கவுண்டமணி தனது நகைச்சுவையில் அரசியல்வாதிகளை காய்ச்சி எடுப்பதில் வல்லவர். நம் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்களையும், அவர்கள் நம்மை ஏமாற்ற பயன்படுத்தும் கொள்கைகளும், ஓட்டு பற்றியும் தலைவரின் நக்கல் வசனங்களை தொகுத்துள்ளேன்...
சிரிக்கவும், சிந்திக்கவும்...
சிரிக்கவும், சிந்திக்கவும்...
Saturday, 8 March 2014
காஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
காஷ்மீர்!. பேரை சொல்லும்போதே ஒருவித குளுமை ஆட்கொள்ளும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இரு நாடுகளுக்கு இடையே சிக்கிக் கொண்ட ஒரு தொன்மையான வளம் செரிந்த நிலப்பரப்பு.இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் அடைந்த தினம் முதல் காஷ்மீரின் சுதந்திரம் பரி போனது. காஷ்மீர் பிரச்சனை பற்றி பலருக்கு விரிவாக தெரிந்திருக்கும், அதைப் பற்றி அறியாதவர்களுக்கு ஒரு அறிமுகம். இதில் காஷ்மீரின் முக்கியமான நிகழ்வுகளை சற்று விரிவாகவே பார்க்கலாம்.
Thursday, 27 February 2014
ஐ.டி துறையில் நடப்பது என்ன ? வினவு தளம் தரும் உபதேசம்
நான் விரும்பிப் படிக்கும் தளங்களில் வினவு ஒன்று. ஆனால் அவர்கள் பிரச்சனைகளை சரியாக சொல்லிவிட்டு சில சமயம் சொல்லும் தீர்வுகள் தான் படு மொண்ணையாக இருக்கிறது.இப்பொழுது கூட உமா மகேஸ்வரி கொலையில் அனைத்தையும் அலசி விட்டு கடைசியில் முதலாளித்துவ எதிர்ப்பு, தொழிற்சங்கம் என பாட ஆரம்பித்துவிட்டனர்.
சரி, தகவல் தொழில்னுட்பத் துறை ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் அமைத்துக் கொடுத்தால் இந்த பிரச்சனை எல்லாம் சரியாகிவிடுமா?
Labels:
அரசியல்
,
சமூகம்
,
தகவல் தொழில்நுட்பம்
Friday, 14 February 2014
ராகுல் காந்தியும் கவுண்டமணியும் வாழைப்பழமும்.
Frankly Speaking with Arnab என்ற ஒரு நிகழ்ச்சிக்கு ராகுல் காந்தி வந்திருந்தார். அர்னாப், ராகுலிடம் பல கேள்விகளை முன்வைக்கிறார், ஆனால் ராகுல் காந்தி சொன்ன பதில்கள் மூன்று விடயங்களை மட்டுமே சுற்றி வந்தது.
பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும், தகவல் அறியும் உரிமை சட்டம், எல்ல நிலைகளிலும் இருக்கும் தற்போதைய செயல்திட்டங்களையும், வேலை செய்யும் முறையையும் மாற்ற வேண்டும்.(கவனிக்கவும் எல்லா நிலைகளிலும்!!).
அவர் பேசியதை, நம் தலைவர் கவுண்டமணியுடன் இணைத்து ஒரு காணொளி உருவாக்கியுள்ளனர்.ஆங்கிலதில் உள்ள கணொளியை தமிழில் (முடிந்தவரை) மொழிபெயர்கிறேன். காணொளியையும் இணைத்துள்ளேன். பாத்து படிச்சு தெளிவாயுடுங்க.
இங்கே அர்னாப் -கு பதிலாக கவுண்டமணி என்று போட்டுள்ளேன்.
கவுண்டமணி: ராகுல், உங்களை Franly Speaking நிகழ்ச்சிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி!
ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
கவுண்டமணி: !!!???? , சரி, உங்கள் 10 வருட அரசியல் வாழ்க்கையில் இது தான் முதல் முறையாக நீங்கள் தொலைக்கட்சிக்கு அளிக்கும் பேட்டி...ஏன் இவ்வளவு இடைவெளி ?
ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
கவுண்டமணி: எனக்கு ஒரு வேண்டுகோள்...
ராகுல்: (பேசிக்கொண்டிருக்கும்போதே....) பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
கவுண்டமணி: நான் உங்கிட்ட என்ன கேட்டேன்?
ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்..
கவுண்டமணி: நிகழ்சிக்கு போவதற்கு முன் சில இதில் நாம் விவாதிக்கப்ப்போகும் அடிப்பையான விடங்களைப் பார்க்கலாம். சரியா?
ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
கவுண்டமணி: ... உட்கார்... நான் உங்கிட்ட என்ன கேட்டேன்?
ராகுல்: நீங்க என்ன வேணும்னாலும் கேளுங்கள்.
கவுண்டமணி: காங்கிரஸ் கட்சி நீங்கள் வ்ந்ததும் அதன் இப்போதைய தடைகளை தாங்குமா?
ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
கவுண்டமணி: (டென்சனாகிரார்!!).. அடேய்.... நான் உங்கிட்ட என்ன கேட்டேன்.. நீ என்ன பேசிட்டு இருக்க?
பாலையா: ஏன்ணே.. என்னாச்சு? ஏன் அவன போட்டு இப்பிடி படுத்துரீங்க?
கவுண்டமணி: நான் எவ்வளே பேரை பேட்டி எடுத்துருக்கேன். இவன மாதிரி ஒரு கல்லூளிமங்கனை பார்த்ததே இல்ல..
பாலையா: இப்பிடி கேட்டா அவன் எப்பிடி சொல்லுவான்.. இப்ப நான் கேக்குறேன். டேய், அண்ணா, உங்கிட்ட ஒரு கேள்வி கேட்டாரு ,
ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்..
பாலையா: குஜராத்-ல மோடி க்கு எதிரா என்ன வியூகம் வச்சிருக்க ?
ராகுல் : தகவல் அறியும் உரிமை சட்டம்.. சொல்லுங்க.. நீங்க என்ன வேணும்னாலும் கேளுங்க?
பாலையா: நீ வந்ததுக்கு அப்புறம் காங்கிரஸ் ல என்ன பன்னனும்-னு இருக்க?
ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
கவுண்டமணி: அடேய்... உன்ன.... யோவ், விடுங்கய்யா.. நானே கேக்குறேன். டேய் நான் உங்கிட்ட என்ன கேட்டேன்.
ராகுல்: கேளுங்கனே..
கவுண்டமணி: நீ உங்க கட்சில என்ன பண்ண போற? தெளிவா ஒரு பதில் சொல்லும்மா ராஜா...
ராகுல்: பெண்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
கவுண்டமணி: டேய்.. இன்னிக்கு உன்ன கொல்லாம விட மாட்டேன்.. சார் புடிங்க சார் அவன..
இப்படி ஒரு மாங்கா மடையன் நம்ம நாட்டுக்கு பிரதமரா வந்தா... வெளங்கிரும்....
Thursday, 13 February 2014
யுவன் ஷங்கர் ராஜவின் புதிய பெயர்
அனைவருக்கும் வணக்கம்!.
மீண்டும் இங்கே அனைவரும் அரைத்த மாவையே அரைத்து தோசை சுட போகிறேன்.யுவன் இசுலாமியரக பல மாதங்களாக வாழ்ந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான் தனது ட்விட்டர் கணக்கு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி பல தளங்களில் விவாதங்கள் நடைப்பெற்றுவிட்டன. யுவன் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறார் என செய்திகளும் வருகின்றன. அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றவோ , பிடித்த பெண்ணை மணம் முடிக்கவும் அவர்க்கு எல்லா வித உரிமையும் சுதந்திரமும் உள்ளது. அதில் மற்றவர்கள் மூக்கை நுழப்பது அநாகாரீகம்.
மீண்டும் இங்கே அனைவரும் அரைத்த மாவையே அரைத்து தோசை சுட போகிறேன்.யுவன் இசுலாமியரக பல மாதங்களாக வாழ்ந்து வந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு தான் தனது ட்விட்டர் கணக்கு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி பல தளங்களில் விவாதங்கள் நடைப்பெற்றுவிட்டன. யுவன் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறார் என செய்திகளும் வருகின்றன. அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றவோ , பிடித்த பெண்ணை மணம் முடிக்கவும் அவர்க்கு எல்லா வித உரிமையும் சுதந்திரமும் உள்ளது. அதில் மற்றவர்கள் மூக்கை நுழப்பது அநாகாரீகம்.
Friday, 7 February 2014
ஆறாம் திணை. நண்டு ஊறுதும் நரி ஊறுதும்....
ஆறாம் திணை. ஆனந்த விகடனில் உருப்படியாய் வரும் ஒரு தொடர் கட்டுரை. இந்த வாரம் இதில் மருத்துவர்.சிவராமன் செயற்கை உணவுகள் மற்றும் குழந்தகளுக்கு உடல் உழைப்பு இல்லாமை பற்றி குறிப்பிட்டிருந்தார்.
கட்டுரையின் கடைசி பத்தியை வாசித்தேன். இந்த முறையில் தழிழ்நாட்டில் சாப்பிட்ட கடைசி தலைமுறையை சார்ந்ததாலோ என்னவோ (கிராமங்களில் கூட இப்பொழுதெல்லம் பார்க்க முடிவதில்லை), இதை பகிர வேண்டும் என்று தோன்றியது..
நீங்களும் வாசிக்கவும்...
குழந்தையின் மென்மையான உள்ளங்கையை சமையல் களமாக்கி 'இது இட்லி,இது சாம்பார் சாதம்,இது கத்தரிக்காய் பொரியல்,இது தயிர்ச் சோறு...' என ஒவ்வொரு விரலாக மடித்து,அம்மாவுக்கு ஒரு வாய்,அப்பவுக்கு ஒரு வாய்,பாட்டிக்கு ஒரு வாய்,தாத்தாவுக்கு ஒரு வாய்,அப்புறம் தொழுவத்துல உள்ள கன்னுகுட்டிக்கு ஒரு வாய், அப்புறமா இந்த செல்லக்குட்டிக்கு' என நண்டு ஊறுது, நரி ஊறுது எனச் சொல்லி மகிழ்வித்து உறவை உயிரைப் போற்றி உணவூட்ட்டிய சமூகம் இது.
இதன் அக்கரை தரும் சுவையையும்,பயனையும் எந்த உப்பு, உயர் புட்டி உணவும் தந்துவிடவ முடியாது
Labels:
இயற்கை
,
உணவு
,
குழந்தைகள்
,
சமூகம்
Monday, 3 February 2014
சூப்பர் சிங்கர் 4- திவாகர் எப்படி பட்டத்தை கைப்பற்றினார்?
பல பேர் பல பதிவுகளை எழுது தள்ளிவிட்டனர் இதைப் பற்றி.. நான் கொஞ்சம் தாமதம். இருந்தாலும் எதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது.
முதலில் சூப்பர் சிங்கரில் இந்த ஓட்டு மூலம் ஒரு நல்லது நடந்தது போல் இருக்கிறது. என்ன என்கிறீர்களா? திறமைக்கு மதிப்பு கிடைத்துள்ளது. பதிவான ஓட்டுகளில் எப்படி கிட்டத்தட்ட 80 சதவீதம் திவாகருக்கு போனது?
Labels:
இசை
,
சமூகம்
,
பொழுதுபோக்கு
Friday, 31 January 2014
இந்தியப்* பகுதியில் பாகிஸ்தானும், சீனாவும் இணைந்து அமைத்துள்ள நெடுஞ்சாலை
வணக்கம்!!!
அப்படி என்ன இருக்கிறது காஷ்மீரில்? சொர்க்கம் என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் காஷ்மீருக்கு போனால் நேரில் பார்க்கலாம். வெண்மையும், பச்சையும்,நீலமும் கலந்த ஒரு பரவச உலகம் அது. இந்த் பதிவை படித்துவிட்டு பின்னூட்டத்தில் தெரிவித்தால் காஷ்மீர் பற்றி பதிவிடுகிறேன்(ஏனென்றல் இது கொஞ்சம் SENSITIVE). சரி எங்கோ போகிறோம்... நெடுஞ்சாலைக்கு போவோம்.
காரகோரம் மலைத்தொடர், எங்கோ படித்த மாதிரி இருக்கிறதா? பள்ளி வரலாறு புத்தகத்தில் இந்தியாவின் மிக உயர்ந்த சிகரங்களை கொண்ட மலைத்தொடர் என்று இருக்கும். ஆனால் இது ஒரு மொள்ளமாரித்தனம் என்பது பலருக்கு தெரிவதில்லை. எனெனில் காரகோரம் பகுதி முழுவதும் பாகிஸ்தான் வசம் போய் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு மேல் ஆச்சு. இந்த காரகோரம் மலைத்தொடரில் தான் பாகிஸ்தானும், சீனாவும் நெடுஞ்சாலை அமைத்திருக்கிறார்கள். உலகின் மிக உயர்ந்த நெடுஞ்சாலையும் இதுவே. சராசரி உயரம் 4500 மீட்டர்கள்!!!.
பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் இருக்கும் இந்த நெடுஞ்சாலை சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரின் ஜின்சியாங்க் நகரையும் அபோதாபாத், ஆம் பின்லேடன் தங்கியிருந்த அதே அபோதாபாத்யும் இணைக்கிறது.. 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சாலை பணி 1979-ல் முடிவடந்தது. 1986-ம் ஆண்டு போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. என்ன இந்தியாவா? அப்போது என்ன செய்துகொண்டிருந்ததா? ம்ம்ம் பஞ்சசீலக் கொள்கைகளை வகுத்துக்கொண்டிருந்தத்து.. அட போங்கப்பா......
1300 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலை இதன் கரடு முரடான பதைகளுக்கு பெயர்போனது. சுற்றிலும் இமய மலை, பனிக்காற்று, ஆறுகள் என்று இது ஒரு அழகுப் பிரதேசம். இதன் இன்னொரு சிறப்பு யுரேசிய கண்டத்தட்டு மற்றும் இந்திய கண்டத்தட்டையும் கடந்து இந்த நெடுஞ்சாலை பயனிக்கிறது, மேலும் ஆப்கனிஸ்தான், டஜிகிஸ்தான்னும் மிக அருகில் வந்து போகும். பாகிஸ்தானை பொருத்தவரையில் இது ஒரு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடம், எனென்றால் கில்கிட்-நகரின் அருகில் தான் நம் நாட்டின் கார்கில் உள்ளது. சும்மா இமய மலையில் ஒரு ஏறு ஏறி இறங்கினால், பாகிஸ்தான் சென்றுவிடலாம். அங்கே சீன வீரர்கள் நம்மை கைமா பண்ண காத்திருப்பார்கள் என்பது வேறு விடயம்.
கில்கிட், சிந்து,ஜால்கோட் நதிகளை கடந்து செல்லும் இதன் 801 கிலோ மீட்டர்கள் பாகிஸ்தானில் உள்ளது.அப்படியே போகிர வழியில் killer Mountain என்று அழக்கப்படும் நங்க பர்பத் மலையை பார்ர்தபடி பயனித்தால் குஞ்செராப் கணவாய் வழியே பாகிஸ்தானின் எல்லைக்கு வந்துவிடலாம். அங்கே செக் போஸ்டில் கையெழுத்து அல்லது கைநாட்டு வத்து விட்டு அப்படியே ஒரு சைனா டீயும் குடித்துவிட்டு வண்டியை எடுத்தால் நேராக குல்மா கணவாய் வழியாக சீனாவின் பகுதியில் மலிவு விலையில் பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம். சீனவின் பகுதில் பெரிய குடியிருப்புகள் எதும் இல்லை, மக்களை குடிவைக்கவா வளைத்துபோடுவார்கள். எல்லாம் அதற்கு தான்.. புரிந்துவிட்டதா? சரி நல்லது....
பாகிஸ்தான் இதை ஒரு சுற்றுலாதலமாக மாற்றியுள்ளது. இமய மலையில் ஏற விரும்பும் வெளி நாட்ட்டவருக்கு இது ஒரு மிகச் சிறந்த கேந்திரம். பாகிஸ்தானின் கடவுச்சீட்டு இல்லாமல் இருந்தால் நீண்ட நாட்கள் தாக்குபிடிக்க முடியாது(உளவாளி என்ற பயம் கலந்த மரியாதையால்). ஒன்று ராணுவத்தால் மற்றொன்று பல குண்டு வெடிப்புகளையும், தீவிரவாத செயல்களையும் பொறுப்புடன் செய்து பொறுப்பேற்கும் சுதந்திர போராட்ட வீரர்களால், அட பாகிஸ்தானின் அத்தனை ஆட்சியாளர்களும் அப்படித்தான் கூறுகி(ன்)றார்கள்.
ஆயிரம் வார்த்தை சொல்ல முடியாததை ஒரு படம் சொல்லிவிடும் என்பார்கள். கீழே காரகோரம் நெடுஞ்சாலையின் சில படங்களை இணைத்துள்ளேன். பார்த்து ரசிக்கும் போதே கண்டிப்பாக மெல்லிய ஏக்கம் வருவது ஏன் என்று தெரியவில்லை.
இது ஒரு சர்வதேச பிரச்சனை என்பதால் தலைப்பில் உள்ள * குறியீடுக்கான அர்த்ததை முதலில் சொல்லிவிடுகிறேன்.தலைப்பை முதலில் இந்தியாவில் என்று தான் வைத்திருந்தேன், ஆனால் அது மிகப்பெரிய அபத்தம் என்பதால் இந்தியப் பகுதி என மாற்றிவிட்டேன் [அபத்தத்தை இறுதியில் பார்க்கலாம் :)]. அதென்ன இந்தியப் பகுதி..ஆமாம், அதுவே தான். காஷ்மீர்.
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசுகிறேன் என்று வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளதால் தான் * குறியீடு, ஆனால் இந்தியாவின் இறையாண்மை அல்ல, பாகிஸ்தானின் இறையாண்மை. ஏனெனில் இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ள இடம் பாகிஸ்தானின் ஆளுகைக்கு உட்ப்பட்ட காஷ்மீர் பகுதியில். 1948-ம் ஆண்டு நடந்த முதல் இந்திய-பாகிஸ்தான் போரில், ஐ.நா சபை அவரவர் போரில் கைப்பற்றிய பகுதியில் தங்கள் எல்லைகளை அமைக்க வேண்டும் என சில வழிமுறைகளை கூறியது. அத்துடன் இரு தரப்பு ராணுவமும் வெளியேறிய பிறகு ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது தனி தேசமாக தொடரலாம் என முடுவெடுக்கப்பட்டது. ஆனான் துரதிர்ஷ்டவசமாக, ராணுவமும் வெளியேறவில்லை, எனவே வாக்கெடுப்பவது மன்னாங்கட்டியாவது என்று இரு நாட்டு அரசுகளும் கங்கணம் கட்டிக் கொண்டு காஷ்மீரை கூறு போட தொடங்கின. 1965-ல் நடந்த இந்தியா-சீன போர், அதை போர் என்று சொல்லக்கூடது. அரசியல்வாதிகள் அடிமட்ட மக்களின் நிலங்களை அடாவடியாக எழுதி வாங்குவது போல் லாடாக் பகுதியின் கிழக்கில் உள்ள சின்சியாங்க்(தற்போதைய பெயர்) பகுதியை வளைத்துக்கொண்டது.
நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசுகிறேன் என்று வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளதால் தான் * குறியீடு, ஆனால் இந்தியாவின் இறையாண்மை அல்ல, பாகிஸ்தானின் இறையாண்மை. ஏனெனில் இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ள இடம் பாகிஸ்தானின் ஆளுகைக்கு உட்ப்பட்ட காஷ்மீர் பகுதியில். 1948-ம் ஆண்டு நடந்த முதல் இந்திய-பாகிஸ்தான் போரில், ஐ.நா சபை அவரவர் போரில் கைப்பற்றிய பகுதியில் தங்கள் எல்லைகளை அமைக்க வேண்டும் என சில வழிமுறைகளை கூறியது. அத்துடன் இரு தரப்பு ராணுவமும் வெளியேறிய பிறகு ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்கள் இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையலாம் அல்லது தனி தேசமாக தொடரலாம் என முடுவெடுக்கப்பட்டது. ஆனான் துரதிர்ஷ்டவசமாக, ராணுவமும் வெளியேறவில்லை, எனவே வாக்கெடுப்பவது மன்னாங்கட்டியாவது என்று இரு நாட்டு அரசுகளும் கங்கணம் கட்டிக் கொண்டு காஷ்மீரை கூறு போட தொடங்கின. 1965-ல் நடந்த இந்தியா-சீன போர், அதை போர் என்று சொல்லக்கூடது. அரசியல்வாதிகள் அடிமட்ட மக்களின் நிலங்களை அடாவடியாக எழுதி வாங்குவது போல் லாடாக் பகுதியின் கிழக்கில் உள்ள சின்சியாங்க்(தற்போதைய பெயர்) பகுதியை வளைத்துக்கொண்டது.
அப்படி என்ன இருக்கிறது காஷ்மீரில்? சொர்க்கம் என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் காஷ்மீருக்கு போனால் நேரில் பார்க்கலாம். வெண்மையும், பச்சையும்,நீலமும் கலந்த ஒரு பரவச உலகம் அது. இந்த் பதிவை படித்துவிட்டு பின்னூட்டத்தில் தெரிவித்தால் காஷ்மீர் பற்றி பதிவிடுகிறேன்(ஏனென்றல் இது கொஞ்சம் SENSITIVE). சரி எங்கோ போகிறோம்... நெடுஞ்சாலைக்கு போவோம்.
காரகோரம் மலைத்தொடர், எங்கோ படித்த மாதிரி இருக்கிறதா? பள்ளி வரலாறு புத்தகத்தில் இந்தியாவின் மிக உயர்ந்த சிகரங்களை கொண்ட மலைத்தொடர் என்று இருக்கும். ஆனால் இது ஒரு மொள்ளமாரித்தனம் என்பது பலருக்கு தெரிவதில்லை. எனெனில் காரகோரம் பகுதி முழுவதும் பாகிஸ்தான் வசம் போய் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளுக்கு மேல் ஆச்சு. இந்த காரகோரம் மலைத்தொடரில் தான் பாகிஸ்தானும், சீனாவும் நெடுஞ்சாலை அமைத்திருக்கிறார்கள். உலகின் மிக உயர்ந்த நெடுஞ்சாலையும் இதுவே. சராசரி உயரம் 4500 மீட்டர்கள்!!!.
பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் இருக்கும் இந்த நெடுஞ்சாலை சீனாவின் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரின் ஜின்சியாங்க் நகரையும் அபோதாபாத், ஆம் பின்லேடன் தங்கியிருந்த அதே அபோதாபாத்யும் இணைக்கிறது.. 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சாலை பணி 1979-ல் முடிவடந்தது. 1986-ம் ஆண்டு போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது. என்ன இந்தியாவா? அப்போது என்ன செய்துகொண்டிருந்ததா? ம்ம்ம் பஞ்சசீலக் கொள்கைகளை வகுத்துக்கொண்டிருந்தத்து.. அட போங்கப்பா......
1300 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலை இதன் கரடு முரடான பதைகளுக்கு பெயர்போனது. சுற்றிலும் இமய மலை, பனிக்காற்று, ஆறுகள் என்று இது ஒரு அழகுப் பிரதேசம். இதன் இன்னொரு சிறப்பு யுரேசிய கண்டத்தட்டு மற்றும் இந்திய கண்டத்தட்டையும் கடந்து இந்த நெடுஞ்சாலை பயனிக்கிறது, மேலும் ஆப்கனிஸ்தான், டஜிகிஸ்தான்னும் மிக அருகில் வந்து போகும். பாகிஸ்தானை பொருத்தவரையில் இது ஒரு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடம், எனென்றால் கில்கிட்-நகரின் அருகில் தான் நம் நாட்டின் கார்கில் உள்ளது. சும்மா இமய மலையில் ஒரு ஏறு ஏறி இறங்கினால், பாகிஸ்தான் சென்றுவிடலாம். அங்கே சீன வீரர்கள் நம்மை கைமா பண்ண காத்திருப்பார்கள் என்பது வேறு விடயம்.
கில்கிட், சிந்து,ஜால்கோட் நதிகளை கடந்து செல்லும் இதன் 801 கிலோ மீட்டர்கள் பாகிஸ்தானில் உள்ளது.அப்படியே போகிர வழியில் killer Mountain என்று அழக்கப்படும் நங்க பர்பத் மலையை பார்ர்தபடி பயனித்தால் குஞ்செராப் கணவாய் வழியே பாகிஸ்தானின் எல்லைக்கு வந்துவிடலாம். அங்கே செக் போஸ்டில் கையெழுத்து அல்லது கைநாட்டு வத்து விட்டு அப்படியே ஒரு சைனா டீயும் குடித்துவிட்டு வண்டியை எடுத்தால் நேராக குல்மா கணவாய் வழியாக சீனாவின் பகுதியில் மலிவு விலையில் பெட்ரோல் போட்டுக்கொள்ளலாம். சீனவின் பகுதில் பெரிய குடியிருப்புகள் எதும் இல்லை, மக்களை குடிவைக்கவா வளைத்துபோடுவார்கள். எல்லாம் அதற்கு தான்.. புரிந்துவிட்டதா? சரி நல்லது....
பாகிஸ்தான் இதை ஒரு சுற்றுலாதலமாக மாற்றியுள்ளது. இமய மலையில் ஏற விரும்பும் வெளி நாட்ட்டவருக்கு இது ஒரு மிகச் சிறந்த கேந்திரம். பாகிஸ்தானின் கடவுச்சீட்டு இல்லாமல் இருந்தால் நீண்ட நாட்கள் தாக்குபிடிக்க முடியாது(உளவாளி என்ற பயம் கலந்த மரியாதையால்). ஒன்று ராணுவத்தால் மற்றொன்று பல குண்டு வெடிப்புகளையும், தீவிரவாத செயல்களையும் பொறுப்புடன் செய்து பொறுப்பேற்கும் சுதந்திர போராட்ட வீரர்களால், அட பாகிஸ்தானின் அத்தனை ஆட்சியாளர்களும் அப்படித்தான் கூறுகி(ன்)றார்கள்.
ஆயிரம் வார்த்தை சொல்ல முடியாததை ஒரு படம் சொல்லிவிடும் என்பார்கள். கீழே காரகோரம் நெடுஞ்சாலையின் சில படங்களை இணைத்துள்ளேன். பார்த்து ரசிக்கும் போதே கண்டிப்பாக மெல்லிய ஏக்கம் வருவது ஏன் என்று தெரியவில்லை.
முதலில் கூறிய அபத்தத்தை பார்ப்போம். இப்படிப்பட்ட பகுதியத்தான் இந்தியா , பாகிஸ்தானிடம் போய் அது எனக்கு சேர வேண்டிய பகுதி, குடுத்துவிட்டு போய் ஹிந்துகுஷ் மலையில் கோவேரு கழுதை மேய்த்து பிழைத்துக்கொள் என்று சொல்கிறது. இனிமேலும் இதை எப்படி கொடுப்பர்கள்? இந்தியப் பகுதி என்று சொல்லக்கூட இனிமேல் நமக்கு வழியில்லை. அங்கு போவதற்கு இந்தியன் என்ற காரணத்தினாலே கண்டிப்பாக கெடுபிடிகள் இருக்கும். ம்ம்ம் என்ன செய்வது, இப்படி நெட்டில் பார்த்து ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டியது தான்.
Wednesday, 29 January 2014
பாதரசத்தை சுலபமான வழியில் எப்படி தங்கமாக மாற்றுவது?
ரசவாதம், நம் சித்தர்களின் சித்துவிளையாட்டுகளில் ஆராய்ச்சியாளர்களுக்குப் பிடிபடாமல் இருக்கும் விஞ்ஞானம். இப்பொழுது இது எப்படி சாத்தியம் என்று பார்ப்போம்.
Labels:
அறிவியல்
Saturday, 11 January 2014
மரபணு சோதனை இல்லாமல் குழந்தைகளின் பெற்றோர்களை கண்டுபிடிக்கலாம்!!!
இது எப்படி சாத்தியம்?. கீழே உள்ள எளிய வழிகளில் இதை வீட்டில் இருந்தே செய்யலாம்.
மரபணு தலைமுறையாக கடந்துவருவது நாம் அனைவரும் அறிந்ததே.. இவைதான் குழந்தைகளுக்கு பெற்றோரின் பண்புகளையும், உருவ ஒற்றுமையையும் தருகின்றன.
---
---
---
---
---
மரபணு தலைமுறையாக கடந்துவருவது நாம் அனைவரும் அறிந்ததே.. இவைதான் குழந்தைகளுக்கு பெற்றோரின் பண்புகளையும், உருவ ஒற்றுமையையும் தருகின்றன.
---
---
---
---
---
---
---
போதும்.. இது சீரியசான பதிவு-னு உள்ள வந்துருந்தா, கொஞ்சம் பல்ல கடிச்சிட்டு மேல படிங்க...
போதும்.. இது சீரியசான பதிவு-னு உள்ள வந்துருந்தா, கொஞ்சம் பல்ல கடிச்சிட்டு மேல படிங்க...
Labels:
குழந்தைகள்
,
நகைச்சுவை
Subscribe to:
Posts
(
Atom
)